tag:blogger.com,1999:blog-5953820194365838801.post2771534515661890940..comments2023-10-17T04:48:14.638-07:00Comments on vetham4u - இந்து முரசு: இறைவன் இருக்கின்றாரா - 1அடியார்http://www.blogger.com/profile/08696445284512441088noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5953820194365838801.post-34037082079866074412009-07-15T19:06:23.712-07:002009-07-15T19:06:23.712-07:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோவி.கண்ணன்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோவி.கண்ணன்....<br /><br />//மூலத்துக்கு மூலம் இருக்க வேண்டும் என்பதற்கு எதும் அழுத்தமான காரணம் இருக்கிறதா ?//<br /><br />எந்தவொரு தொடக்கத்திற்கும் ஆரம்பப்புள்ளி வேண்டுமல்லவா...., அது போல எந்த மூலத்திற்கும் ஒரு முதன்மையான மூலம் வேண்டுமல்லவா...<br /><br />//அனைத்தும் எப்போதும் இருந்திருக்கும் என்று நினைப்பதற்கு என்ன தடை ? நம் அறிவியல்<br />வரலாறு காலம் வெறும் 3000 ஆண்டுகள் தானே ? //<br /><br />அதேதான் இங்குள்ள அனைத்துமே எப்போதும் இங்கிருப்பவைதான், நாம் அவற்றை தற்போதுதான் அறிந்துகொள்கின்றோம்,- ஒரு குழந்தை வளரும்போது எப்படி தன்னைச் சூழ இருப்பவற்றை அறிந்துகொள்கின்றதோ அப்படி நாமும் வளர வளர நம்மைச் சூழ இருப்பவற்றை அறிந்து கொள்கின்றோம்....<br /><br />அதற்கும் முன்பு அல்லது எப்போதுமே உயிரனம் இருந்ததில்லை என்று எப்படி நினைக்கிறீரகள்//<br /><br />நான் அப்படிக் கூறவில்லையே...., எத்தனை யுகங்கள் மாறிவிட்டன, யுகங்களில் நடந்தவை என புராணங்கள் கூறுகின்றன, அப்படி இருக்கும் போது இதற்குமுன் உயிரினம் இருந்ததில்லை என எப்படிக் கூறமுடியும்....<br /><br />என்னுடைய கருத்து என்னவெனில்....ஏதோ ஒரு மூலத்தில் இருந்துதான் [அது எத்தனை வருடங்களுக்கு முன்னராக இருந்தாலும்] அனைத்துமே தோன்றியிருக்கமுடியும்... அந்த ஆதிமூலமான பொருளை யார் தோற்றுவித்திருக்கமுடியும்?....<br /><br />//விவேகந்தர் அத்வைதி அவர் ஜெகன்மாதாவைக் கண்டதாக எங்கே சொல்லி இருக்கிறார் ? //<br /><br />இராமகிருஷ்ணபரஹம்ஸரை விவேகானந்தர் சந்தித்த ஆரம்பகாலத்தில், விவேகானந்தர் இறைவனை உங்களால் காட்டமுடியுமா என்று கேட்டார். அதற்கு இராமகிருஷ்ணர் இறைவனைக் காட்டினார் என்று கூறுவார்கள். ஒரு தடவை மட்டும் இது நிகழவில்லை. மறுமுறை தன் துன்பங்கள் விலக அன்னையைப் பிரார்த்திக்குமாறு பரமஹம்ஸரை விவேகானந்தர் கேட்டுக்கொண்டார், அதற்கு நீயே கேட்டுக்கொள் என்று பரமஹம்ஸர் பதிலளித்தார். விவேகானந்தர் அன்னையைக் கண்டதும் தான் கேட்கவந்தவற்றை மறந்து நின்றார்.<br />--- இவ்வாறு ஸ்ரீ ராமகிருஷ்ண சரிதங்களில் கூறப்பட்டுள்ளது.அடியார்https://www.blogger.com/profile/08696445284512441088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5953820194365838801.post-31341102523327156892009-07-15T01:21:54.627-07:002009-07-15T01:21:54.627-07:00//இங்கு நாம் கண்டுபிடிக்கும் பொருட்கள் அத்தனையுமே ...//இங்கு நாம் கண்டுபிடிக்கும் பொருட்கள் அத்தனையுமே ஏற்கனவே இங்கு இருப்பவைதான். ஏற்கனவே இங்கு இருக்கும் மூலக்கூறுகளை விதம் விதமாகக் கலந்து புதிய பொருட்களை உருவாக்குகிறார்கள். நாமே முற்றுமுழுதாக ஒரு பொருளை உருவாக்கிவிடுவதில்லை. //<br /><br />இதுவரை சரி,<br /><br />//நம்மால் ஒரு மூலக்கூறினைக் கூட உருவாக்க முடியாதுள்ளபோது, இத்தனை மூலக்கூறுகளையும் படைத்தது யார்?. அதுதான் இறைவன்.//<br /><br />மூலத்துக்கு மூலம் இருக்க வேண்டும் என்பதற்கு எதும் அழுத்தமான காரணம் இருக்கிறதா ? அனைத்தும் எப்போதும் இருந்திருக்கும் என்று நினைப்பதற்கு என்ன தடை ? நம் அறிவியல் / வரலாறு காலம் வெறும் 3000 ஆண்டுகள் தானே ? அதற்கும் முன்பு அல்லது எப்போதுமே உயிரனம் இருந்ததில்லை என்று எப்படி நினைக்கிறீரகள்.<br /><br />இராமகிருஷ்ணர் துவைதி, விவேகந்தர் அத்வைதி அவர் ஜெகன்மாதாவைக் கண்டதாக எங்கே சொல்லி இருக்கிறார் ? அத்வைதிகள் சடப் பொருள் / உருவ வழிபாட்டின் மீது நம்பிக்கை அற்றவர்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com