ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Thursday, February 19, 2009

திருவாசகம்

திருச்சிற்றம்பலம்.

தொல்லை யிரும்பிறவி சூழுந்தளை நீக்கி
அல்லலறுத்தானந்தம் ஆக்கியதே
எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னுந் தேன்.

நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க!
ஆகமம், ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன், அநேகன், இறைவன் அடி வாழ்க!

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன்கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன்கழல் வெல்க!

ஈசன் அடி போர்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீர்ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்,
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை,
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன்யான்

கண்நுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்துஎய்தி
எண்ணுதற்கு எட்டா எழில்ஆர் கழல் இறைஞ்சி,
விண்நிறைந்து, மண்நிறைந்து மிக்காய்விளக்கு ஒளியாய்
எண் இறந்து, எல்லை இலாதானே! நின் பெரும் சீர்
பொல்லா வினையேன், புகழும் ஆறு ஒன்று அறியேன்;

புல்லாகி, பூடாய், புழுவாய், மரமாகிப்
பல்விருகம் ஆகி, பறவையாய், பாம்பாகி
கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்,
வல் அசுரர் ஆகி, முனிவராய்த் தேவராய்,
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம் பெருமான்!
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரம் ஆய்நின்ற
மெய்யா! விமலா! விடைப்பாகா! வேதங்கள்
'ஐயா' என ஓங்கி, ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!

வெய்யாய்! தணியாய்! இயமானன் ஆம் விமலா!
பொய்ஆயின எல்லாம் போய்அகல வந்தருளி
மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே!
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்அறிவே!

ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து உலகும்
ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய் அருள் தருவாய்,
போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நிப்தொழும்பில்
நாற்றத்தின் நேரியாய்! சேயாய்! நணியானே!
மாற்றம், மனம்கழிய நின்ற மறையோனே!

கறந்தபால் கன்னலொடு, நெய்கலந்தாற் போலச்
சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று,
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்!
நிறங்கள் ஓர் ஐந்துடையாய்! விண்ணோர்கள் ஏத்த
மறைந்துஇருந்தாய் எம் பெருமான்! வல்வினையேன் தன்னை

மறைந்திட மூடிய மாய இருளை,
அறம், பாவம், எனும் அரும் கயிற்றால் கட்டி,
புறம்தோல் போர்த்து, எங்கும் புழுஅழுக்கு மூடி,
மலம்சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன்ஐந்தும் வஞ்சனையைச் செய்ய

விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
கலந்த அன்பாகி, கசிந்துஉள் உருகும்
நலம்தான் இலாத சிறியேற்கு நல்கி,
நிலம்தன்மேல் வந்தருளி, நீள் கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு

தாயிற் சிறந்த தயாஆன தத்துவனே!
மாசுஅற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே!
தேசனே! தேன்ஆர் அமுதே! சிவபுரனே
பாசம்ஆம் பற்றுஅறுத்து, பாரிக்கும் ஆரியனே!
நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,

பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆர்உயிராய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே!

அன்பருக்கு அன்பனே! யாவையும் ஆய், அல்லையும் ஆய்
சோதியனே! துன்இருளே தோன்றாப் பெருமையனே!
ஆதியனே! அந்தம் நடுஆகி, அல்லானே!
ஈர்த்துஎன்னை, ஆட்கொண்ட எந்தை பெருமானே!
கூர்த்தமெய்ஞ் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின்

நோக்கரிய நோக்கே! நுணுகுஅரிய நுண்உணர்வே!
போக்கும், வரவும், புணர்வும் இலாப் புண்ணியனே!
காக்கும்எம் காவலனே! காண்பரிய பேர்ஒளியே!
ஆற்றுஇன்ப வெள்ளமே! அத்தா! மிக்காய் நின்ற
தோற்றச் சுடர்ஒளி ஆய், சொல்லாத நுண்உணர்வு ஆய்

மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறேவந்து அறிவுஆம்
தேற்றனே! தேற்றத் தெளிவே என சிந்தனையுள்
ஊற்றுஆன உண்ஆர் அமுதே! உடையானே!
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன்! "எம் ஐயா", "அரனே!ஓ" என்று என்று

போற்றிப் புகழ்ந்திருந்து, பொய்கெட்டு, மெய்ஆனார்
மீட்டு இங்கு வந்து, வினைப்பிறவி சாராமே,
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே!
நள்இருளில் நட்டம் பயின்றுஆடும் நாதனே
தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே!

அல்லல் பிறவி அறுப்பானே! ஓ! என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லி, திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்,
பல்லோரும் ஏத்தப் பணிந்து.

திருச்சிற்றம்பலம்

search tags : thiruvasagam, namashivaya, shivan, manikavasagar, மாணிக்கவாசகர், திருவாசகம், தேவாரம்.

1 comment:

HS said...

Submit your blog to the Tamil Top Blogs directory http://kelvi.net/topblogs/

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin