நல்ல தகவல்கள் - 2
நல்ல விடயங்களில் மேலும் சிலவற்றினை அறிந்து கொள்வோம், வாருங்கள்:
நான்கு வகை உயிரினங்கள்:
1. சுவேதஜம் - புழுக்கத்திலிருந்து பிறக்கக்கூடியன - புழு, பூச்சி, கொசு போன்றவை.
2. உத்பிஜம் - பூமியைப் பிளந்து கொண்டு வெளிவருவன - மரம், செடி, கொடி போன்றவை.
3. அண்டஜம் - முட்டையிலிருந்து வெளிவருவன - பறவைகள், சில நீர்வாழ்வன போன்றவை
4. ஜராயுதம் - கருப்பையிலிருந்து வெளிவருவன - மனிதன், சில விலங்குகள் போன்றவை.
ஆதித்தனுடைய ஏழு புத்திரர்கள்:
1. கர்ணன்
2. காளந்தி
3. சுக்ரீவன்
4. தத்திய மகன்
5. சனி
6. நாதன்
7. மனு
பெண்களுக்குரிய ஏழு பருவங்கள்:
1. பேதை - 1 முதல் 8 வயது வரை
2. பெதும்பை - 9 முதல் 10 வயது வரை
3. மங்கை - 11 முதல் 14 வயது வரை
4. மடந்தை - 15 முதல் 18 வயது வரை
5. அரிவை - 19 முதல் 24 வயது வரை
6. தெரிவை - 25 முதல் 29 வயது வரை
7. பேரிளம் பெண் - 30 வயது முதல்.....
ஆண்களுக்குரிய ஏழு பருவங்கள்: [ பெண்களின் வயதெல்லையும் ஆண்களின் வயதெல்லையும் ஒன்றுதான் என்பதை கவனத்திற்கொள்க ]
1. பலன்
2. மீளி
3. மறவோன்
4. திறவோன்
5. காளை
6. விடலை
7. முதுமகன்
நந்தியின் அருள் பெற்ற எட்டுப்பேர்:
1. சனகர்
2. சனாதனர்
3. சனந்தகர்
4. சனத்குமாரர்
5. வியாக்கிரபாதர்
6. பதஞ்சலி
7. சிவயோக முனிவர்
8. திருமூலர்
அஷ்ட பர்வதங்கள்:
1. கயிலை
2. இமயம்
3. ஏமகூடம்
4. கந்தமாதனம்
5. நீலகிரி
6. நிமிடதம்
7. மந்தரம்
8. விந்தியமலை
ஆத்ம குணங்கள்:
1. கருணை
2. பொறுமை
3. பேராசையின்மை
4. பொறாமையின்மை
5. நல்லனவற்றில் பற்று [உறுதி]
6. உலோபத்தன்மையின்மை
7. மனமகிழ்வு
8. தூய்மை
எண்வகை மங்கலங்கள்:
1. கண்ணாடி
2. கொடி
3. சாமரம்
4. நிறைகுடம்
5. விளக்கு
6. முரசு
7. ராஜசின்னம்
8. இணைக்கயல்
இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : நல்ல தகவல்கள் - 1
search tags : Nava Nithi, Envagai, Thaanagal, Naagangal
_*_*_*_
No comments:
Post a Comment