ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Sunday, February 22, 2009

சக்திபீடங்கள்

அன்பர்களே நீங்கள் சக்தி பீடங்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால் முழுமையாக அறிந்துள்ளீர்களா ?. பொதுவாக சக்தி பீடங்கள் 64 உண்டு எனக் குறிப்பிடுவர். ஆனால் சிலர் 108 உண்டெனவும், சிலர் 51 உண்டெனவும் கூறுவர். இதில் எது மெய்யானது எனக் கண்டுபிடிப்பது மிகக்கடினம்.

ஆகையால் நாம் 51, 64, 108 ஆகிய மூன்று விதமான சக்திபீடங்களைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

முதலில் சக்தி பீடம் உருவான வரலாற்றை நோக்கலாம். வரலாற்றிலும் மூன்று வகையான வரலாறுகள் உண்டு.

முதல் வரலாறு:

சிவபெருமானை மதிக்காமல் தக்கன் செய்த யாகத்திற்குச் சென்ற பராசக்தியான தாஷாயணி, அங்கு தானும் தனது நாயகனும் அவமதிக்கப்பட்டதால் மனம் பொறுக்காமல் அங்கு இருந்த யாககுண்டத்தில் விழுந்து உயிர் துறந்தார். இதனை அறிந்த சிவனாட் அடங்காச் சினத்திடன் அங்கு வந்து தனது தேவியின் இறந்த உடலை எடுத்துச் சிரசின் மேலே வைத்து சுழன்று சுழன்று ஆவேசமாக ஆடினார். உலகமே அஞ்சியது. அழிவு நெருங்கி விட்டதோ என பிரம்மா முதல் அனைவரும் நடுங்கினர். இதனைப் பார்த்த காத்தற் கடவுளான திருமால் தமது சக்கராயுதத்தை ஏவிப் பராசக்தியின் உடலைத் துண்டுகளாக்கி தெறித்து விழச் செய்தார். பாரத நாட்டின் பல்வேறு பாகங்களில் உடற்பாகங்கள் விழுந்தன, அவையே சக்தி பீடங்களாக திகழ்கின்றன.

- - - - -

இரண்டாவது வரலாறு:

தட்சன் மகளாய் அன்னை அவதரித்து, சதிதேவி எனப் பெயர் பெற்று, தந்தை சிவனை தூஷித்ததால் அக்கினியில் பாய அக்கினிக்குள் சித்கலாரூபமாக இருந்த சதிதேவியின் திருமேனியைத் தோளில் தூக்கிக் கொண்டு உலகமெல்லாம் திரிந்த சிவன், விஷ்ணு வேண்ட சித்கலாரூபமான அன்னையின் கலைகளை அகிலமெங்கும் தனித் தனிப் பீடமாக இருக்கச் செய்தார். அங்கனம் அமைந்த நூற்றெட்டுப் பீடங்களிலும் தானும் அமர்ந்து அருள் செய்தார். இந் நூற்றெட்டு சக்தி பீடங்களின் பெயர்களையும், தேவியின் பெயர்களையும் கேட்கவோ நினைக்கவோ செய்பவர் பாவங்களில் இருந்து விடுபட்டுத் தேவியின் திருவடி அடைவர் எனத் தேவிபாகவதத்தில் வியாசர் கூறியுள்ளார்.

- - - - -

மூன்றாவது வரலாறு:

சிவபெருமான் தேவியின் சிற்கலாரூபத்தைத் தாங்கி நிற்கையில் உலக ஜீவனத்தின் பொருட்டு அதனை வேண்டி திருமாலே சக்தி பீடங்களாக ஸ்தாபித்தார் என்கிறது அபிதான சிந்தாமணி எனும் நூல்.

- - - - -

இனி தேவியின் மூன்று வகையான சக்தி பீடங்களையும் பற்றிப் பார்க்கலாம்.

- - - - -

தேவியின் ஐம்பத்தொரு (51) சக்தி பீடங்கள்:

1 - காஞ்சிபுரம் - இது ஸ்ரீ சக்கரபீடம். தேவியின் எலும்புகள் இங்கு விழுந்ததாகக் கூறுவர்.

2 - மதுரை - இது மந்த்ரிணி பீடம்.

3 - திருஆனைக்கா - இது வராகி பீடம்.

4 - திருக்குற்றாலம் - இது பராசக்தி பீடம்.

5 - திருவாரூர் - இது கமலை பீடம், காமகலா பீடம் என்றும் கூறுவர்.

6 - கன்னியாகுமரி - இது தேவியின் பிருஷ்டபாகம் விழுந்த இடம்.

7 - அம்பத்தூர் - சென்னைக்கு அருகிலுள்ள வைணவி ஆலயம், சக்திபீட வரிசையில் ஐம்பத்தோரூர் என்பதே அம்பத்தூர் என மருவியதாகக் கூறுவர்.

8 - கோகர்ணம் - வலது காது விழுந்த இடம். பரசுராம ஷேத்திரம். தேவியின் திருநாமம் பத்ரகர்ணிகை.

9 - ஸ்ரீ சைலம் - இடது காது விழுந்த இடம். சிறந்த சிவத்தலம். அம்பிகையின் திருநாமம் பிரமராம்பாள். மாதவி பீடம்.

10 - பூரி - நாபி விழுந்த இடம். உத்கலம் எனப்படும் ஒரிசா மாநிலத்தில் உள்ளது. பைரவ பீடம். தேவியின் திருநாமம் விமலை.

11 - சிருங்கேரி - மைசூர் மாநிலத்தில் உள்ளது. தேவி சாரதையாகத் திகழ்கின்றாள்.

12 - கோலாப்பூர் - கண்கள் விழுந்த இடம். அன்னை மகா இலக்குமியாக விளங்குகின்றாள்.

13 - அரசூர் - தனம் விழுந்த இடம். ஆபூமலைக்கு அருகில் உள்ளது. இங்கு சிலா வடிவில் இல்லாமல் அம்பிகை யந்திர வடிவில் அம்பிகா என்ற திருநாமத்துடன் விளங்குகின்றாள்.

14 - ஜலந்தரா - தனம் விழுந்த இடம். தேவியின் திருநாமம் திரிபுரமாலினி.

15 - துவாராவாட் - குஜராத் மாநிலத்தில் உள்ளது.

16 - பிரபாசா - திருவயிறு விழுந்த இடம். இதனை சோமநாதத் தலம் என்றும் கூறுவர்.

17 - பராகத் - இக்குன்றின் அமைப்பே காளிகா யந்திர உருவில் உள்ளது.

18 - சிம்லா - தேவியின் திருநாமம் சியாமளா. இதுவே திரிந்து சிம்லா ஆயிற்று.

19 - மானசரோவர் - இது ஒரு தடாகம். தலை விழுந்த இடம். இமயத்தில் உள்ளது. அம்பிகை தாட்சாயணி. குமுதா பீடம்.

20 - காஷ்மீரம் - கழுத்து விழுந்த இடம். அம்பிகையின் திருநாமம் மகாமாயை.

21 - நேபாளம் - முழங்கால் விழுந்த இடம். இங்குள்ள அஷ்ட மாத்ருகைகளின் ஆலயம் புகழ்மிக்கது.

22 - ஜுவாலாமுகி - நாக்கு விழுந்த இடம்.

23 - சுகந்தா - மூக்கு விழுந்த இடம். இமயமலைச் சரிவில் உள்ள தலம்.

24 - வாரணாடி ( காசி ) - காதுக் குண்டலம் விழுந்த இடம். இது மணிகர்ணிகை பீடம். தேவியின் திருநாமம் விசாலாஷி.

25 - நைமிசாரண்யம் - அம்பிகை இலிங்க தாரிணியாகத் திகழ்கின்றாள்.

26 - குருஷேத்திரம் - முழங்கை விழுந்த இடம்.

27 - பிரயாகை - கைவிரல்கள் விழுந்த இடம்.

28 - உஜ்ஜயினி - இங்கு தேவி மங்கள சண்டிகையாக விளங்குகின்றாள். மகாகவி காளிதாசனுக்கு அருள் நல்கியவள்.

29 - பிருந்தாவனம் - கூந்தல் விழுந்த இடம். இராதா பீடம்.

30 - அத்தினாபுரம் - இங்கு அம்பிகையின் திருநாமம் ஜெயந்தி. ஜயந்தி பீடம்.

31 - கன்னியாகுப்ஜம் - கௌரி பீடம். அம்பிகையின் திருநாமம் கௌரி.

32 - புஷ்கரம் - அன்னையின் திருநாமம் புருஹுதை. புருஹுதா பீடம்.

33 - கேதாரம் - சன்மார்க்க தாயினி பீடம்.

34 - பத்ரை - பத்ரேஸ்வரி பீடம்.

35 - உருத்திர கோடி - உருத்ராணி பீடம்.

36 - சாளக்ராமம் - மஹாதேவி பீடம்.

37 - மலயாசலம் - தேவியின் திருநாமம் கல்யாணி. ரம்பா பீடம்.

38 - தேவிகா தடம் - நந்தினி பீடம்.

39 - சஹஸ்திராஷம் - உத்பலாஷி பீடம்.

40 - வராக சைலம் - ஜயா பீடம்.

41 - இரண்யாஷம் - மகோத்பலா பீடம்.

42 - திரிகூடபர்வதம் - உருத்திர சுந்தரீ பீடம்.

43 - சஃயபர்வதம் - ஏகவீரா பீடம்.

44 - வைத்தியநாதம் - ஆரோக்யா பீடம்.

45 - மகாகாளம் - மஹேஸ்வரி பீடம்.

46 - விந்தியபர்வதம் - நிதம்பை பீடம்.

47 - வேதமுகம் - காயத்ரீ பீடம்.

48 - ஹேமகூடம் - மன்மதா பீடம்.

49 - அமர கண்டம் - சண்டிகா பீடம்.

50 - கல்கத்தா - கால் விரல்கள் விழுந்த இடம். அன்னை காளிகா தேவியாக அருள் பாலிக்கின்றாள்.

51 - காமரூபம் - உபஸ்தம் விழுந்த இடம். இத்தலம் அஸ்ஸாமில் உள்ளது. காமாக்யா என்பது அம்பிகையின் திருநாமம்.

- - - - -

தேவியின் அறுபத்துநான்கு சக்தி பீடங்கள்:

1 - மாத்ரு புரம் - ரேணுகா பீடம்.
2 - கொல்லாபுரம் - லஷ்மி பீடம்.
3 - துளஜாபுரம் - சப்தச்ருங்க பீடம்.
4 - இங்குளை - ஜுவாலாமுகீ பீடம்.
5 - ஸ்ரீ காசி - அன்னபூர்ணா பீடம்.
6 - ரக்த தந்த்ரிகை - விந்த்யாசல பீடம்.
7 - ரக்த தந்த்ரிகை - துர்கா பீடம்.
8 - சாகம்பரீ - ப்ராமீரி பீடம்.
9 - மதுரை - மீனாட்ஷி பீடம்.
10 - நேபாளம் - ரஷய காளீ பீடம்.
11 - ஸ்ரீ நகரம் - சாம்பு நகேச்வரி பீடம்.
12 - நிலபர்வதம் - நீலாம்பரி பீடம்.
13 - ஸ்ரீ சந்திரகலை - கௌசிகீ பீடம்.
14 - ஸ்ரீ காஞ்சி - காமாஷி பீடம்.
15 - வைத்ய நாதம் - ஜ்வாலா பீடம்.
16 - சைனா - நீலசரஸ்வதி பீடம்.
17 - வேதாரண்யம் - ஏகாம்பர பீடம்.
18 - வேதாரண்யம் - சுந்தரீ பீடம்.
19 - மஹாசலம் - யோகேஸ்வர பீடம்.
20 - ஹிதய பர்வதம் - மாதேவீ பீடம்.
21 - மணித்வீபம் - புவனேஸ்வரி பீடம்.
22 - மணித்வீபம் - திரிபுரபைரவி பீடம்.
23 - அமரேசம் - சண்டிகா பீடம்.
24 - ப்ரபாஸம் - புஷகரேஷணி பீடம்.
25 - புஷ்கரம் - காயத்ரீ பீடம்.
26 - நைமிமீசம் - தேவி பீடம்.
27 - புஷ்காராஷம் - புருகாதா பீடம்.
28 - ஆஷாடம் - ரதி பீடம்.
29 - பாரபூதி - பூதி பீடம்.
30 - கண்ட முண்டம் - தண்டினீ பீடம்.
31 - நாமுலம் - நாகுலேஸ்வரி பீடம்.
32 - ஸ்ரீகிரி - சாரதா பீடம்.
33 - பஞ்ச நகம் - திரிசூல பீடம்.
34 - ஹரிச் சந்திரம் - சந்திரா பீடம்.
35 - ஆமரதகேஸ்வரம் - ஸீஷ்மபீடம்.
36 - மஹாகாளாஸ்தி - சாங்கீரீ பீடம்.
37 - மத்யாபீதம் - சர்வாணி பீடம்.
38 - கயை - மங்கள பீடம்.
39 - கேதாரம் - மார்க்கதாயினீ பீடம்.
40 - பைரவம் - பைரவீ பீடம்.
41 - குருஷேத்ரம் - தர்ணுப்பிரியை பீடம்.
42 - விபினாகுலம் - ஸ்வாயம் பலி பீடம்.
43 - கணகளம் - உக்ர பீடம்.
44 - விமகேஸ்வரம் - விஸ்வேஸ பீடம்.
45 - ஹடாஹாசம் - மதாந்தக பீடம்.
46 - பீமம் - பீமபீடம்.
47 - வஸ்த்ரம்பதம் - பவானி பீடம்.
48 - அவமுக்தம் - விசாலாஷி பீடம்.
49 - அர்த்த கோடிகம் - ருத்ராணி பீடம்.
50 - அவழுக்தம் - வராஹி பீடம்.
51 - மஹாலயம் - மஹாபாகாபீடம்.
52 - கோகர்ணம் - பத்ரகாளீ பீடம்.
53 - பத்ரகர்ணீகம் - பத்ரா பீடம்.
54 - ஸ்தாணும் - ஸ்தாண்வீசாபீடம்.
55 - ஸ்வர்ணாஷம் - உத்பலாஷி பீடம்.
56 - கமலாலயம் - கமலா பீடம்.
57 - சகமண்டலம் - ப்ரசண்ட பீடம்.
58 - மகேடெம் - மகுடேஸ்வரி பீடம்.
59 - குரண்டலம் - த்ரிசந்திரகா பீடம்.
60 - மண்டலேசம் - சரண்டகா பீடம்.
61 - ஸ்தூலகேஸ்வரம் - ஸ்தூல பீடம்.
62 - சங்க கர்ணம் - தீவனி பீடம்.
63 - கரவஞ்சம் - காளி பீடம்.
64 - ஞானிகள் இதயம் - பரமேஸ்வரி பீடம்.

- - - - -

தேவியின் நூற்றெட்டு சக்தி பீடங்கள்:

1 - காசி ஷேத்திரத்தில் விசாலாஷி
2 - நைமிசாரண்யத்தில் லிங்க தாரணீ
3 - பிரயாகையில் லலிதை
4 - கந்தமாதனத்தில் காமுகீ
5 - மானசரஸில் குமுதா
6 - அதன் தென்திசையில் விசுவகாமா பகவதி
7 - அதன் வடதிசையில் விஸ்வகாமப்பூரணி
8 - கோமந்தகத்தில் கோமதி
9 - மந்தரத்தில் காமசாரிணீ
10 - சயித்திராதத்தில் மதோத்கடை
11 - அஸ்தினாபுரத்தில் ஜயந்தி
12 - கன்யாகுப்ஜத்தில் கௌரி
13 - மலையாசலத்தில் ரம்பை
14 - ஏகாம்பர பீடத்தில் கீர்த்திமதி
15 - விஸ்வத்தில் விஸ்வேஸ்வரி
16 - புஷ்பகரத்தில் புருஹீதை
17 - கேதார பீடத்தில் சன்மார்க்கதாயினி
18 - இமயமலையின் பின்புறத்தில் மந்தா தேவி
19 - கோகர்ணத்தில் பத்திரகர்ணிகா தேவி
20 - பவானியில் ஸ்தானேஸ்வரி
21 - வில்வ பத்திரிகையில் பில்வகை
22 - ஸ்ரீசைலத்தில் மாதவி
23 - பத்திரையில் பத்திரேஸ்வரி
24 - வராக மலையில் ஜயை
25 - கமலாலயத்தில் கமலை
26 - ருத்ரகோடியில் ருத்திராணி
27 - காலஞ்சரத்தில் காளி
28 - சாளக்கிராமத்தில் மகாதேவி
29 - சிவலிங்கத்தில் ஜலப்பிரபை
30 - மகாலிங்கத்தில் கபிலை
31- மாகோட்டத்தில் மகுடேஸ்வரி
32 - மாயாபுரியில் குமாரி
33 - சந்தானத்தில் லலிதாம்பிகை
34 - கயையில் மங்களாம்பிகை
35 - புருஷோத்தமத்தில் விமலை
36 - சகஸ்ராஷத்தில் உத்பலாட்சி
37 - இரணாஷத்தில் மகோத்பலை
38 - விபசாவில் அமோகாஷி
39 - புண்டரவர்த்தனத்தில் பாடலீ
40 - சுபாரு சுவத்தில் நாராயணி
41 - திரிகூட பர்வதத்தில் ருத்திர சுந்தரி
42 - விபுலத்தில் விபுலாதேவி
43 - மலையாசலத்தில் கல்யாணி
44 - சஹ்ய பர்வதத்தில் ஏகவீனர்
45 - அரிச்சந்திரத்தில் சந்திரிகாதேவி
46 - ராமதீர்த்தத்தில் ரமணா
47 - யமுனா தீர்த்தத்தில்மிருகாவதி
48 - கோடிக்கரையில் கோடவீ
49 - மாதவனத்தில் சுகந்தாதேவி
50 - கோதாவரியில் திரிசந்தி
51 - கங்காதுவாரத்தில் ரதப்பிரியை
52 - சிவகுண்டத்தில் சுபானந்தை
53 - தேவிகாதடத்தில் நந்தினி
54 - துவாரகையில் ருக்மிணி
55 - பிருந்தாவனத்தில் ராதை
56 - மதுரையில் தேவகி
57 - பாதாளத்தில் பரமேஸ்வரி
58 - சித்திரகூடத்தில் சீதாதேவி
59 - விந்தியத்தில் விந்தியாவாசினி
60 - கரவீரத்தில் மகாலஷ்மி
61 - வைத்தியநாதத்தில் ஆரோக்யை
62 - விநாயகத்தலத்தில் உமாதேவி
63 - மகாகளத்தில் மகேஸ்வரி
64 - உஷ்ண தீர்த்தத்தில் அபயாம்பிகை
65 - விந்தியமலையில் நிதம்பை
66 - மாண்டவியத்தில் மாண்டவி
67 - மகேஸ்வரபுரத்தில் ஸ்வாஹாதேவி
68 - சகலண்டலத்தில் பிரசண்டை
69 - அமரகண்டத்தில் சண்டிகாதேவி
70 - சோமேஸ்வரத்தில் வராரோகை
71 - பிரபாசத்தில் புஷ்கராவதி
72 - மகாலயத்தில் மகாபாகை
73 - சரசுவதி நதித்தலத்தில் தேவமாதை
74 - பயோஷணியத்தில் பிங்களேஸ்வரி
75 - கிருத சௌக்யத்தில் சிம்மாகை
76 - கார்த்திகையில் ஆதிசங்கரி
77 - உற்பலாவர்தத்தில் லோலாதேவி
78 - சோணசங்கமத்தில் சுபத்திரா
79 - சித்தவதனத்தில் லஷ்மி
80 - பரதாசிரமத்தில் அனங்கை
81 - ஜாலந்தரத்தில் விஸ்வமுகி
82 - கிஷ்கிந்தமலையில் தாராதேவி
83 - தேவதாரு வனத்தில் யுஷ்டிர்மேதை
84 - காஷ்மீரத்தில் பீமாதேவி
85 - ஹிமாத்திரியில் துஷ்டிவிஸ்வேஸ்வரி
86 - கபால மோசனத்தில் சுத்தி
87 - காயாரோகணத்தில் மாதாதேவி
88 - சங்கோத்தரத்தில் தாரா
89 - பிண்டாரக ஆலயத்தில் திருதி
90 - சந்திரபாகா நதியில் கலாதேவி
91 - அச்சோதயத்தில் சிவதாரணி
92 - வேணீயாற்றில் அமுதாதேவி
93 - பதரியில் உரசி
94 - உத்தரகிரியில் ஔஷதை
95 - குசத்வீபத்தில் குசோதகாதேவி
96 - ஏமகூடத்தில் மன்மதை
97 - குமுதத்தில் சத்தியத்வாதினி
98 - அஸ்வத்தில் வந்தினி
99 - குபோலயத்தில் நிதிதேவி
100 - தேவமுகத்தில் காயத்திரி தேவி
101 - பிருமாமுகத்தில் சரஸ்வதி
102 - சிவ சந்நிதியில் பார்வதி தேவி
103 - தேவலோகத்தில் இந்திராணி
104 - சூரியபிம்பத்தில் பிரபாதேவி
105 - சப்த மாதர்களில் வைஷ்ணவி
106 - பதிவிரதைகளில் அருந்ததி
107 - அழகான மங்கையரில் திலோத்தமை
108 - சகலதேகிகளின் சித்தத்தில் சக்தி பிரம்மகலை.

இவற்றைத்தான் தேவியின் சக்திபீடங்கள் என அழைப்பர். தேவியின் இத்தனை சக்திபீடங்களையும் தரிசித்தோர் மிக மிகக் குறைவானோரே. எனவே முடிந்தால் தேவியின் இத்தனை சக்திபீடங்களையும் பக்தியோடு சென்று தரிசியுங்கள். சொல்லிலடங்கா அளவு புண்ணியம் உங்களுக்குக் கிட்டும். அந்த அன்னையின் அருள் இருந்தால் நிச்சயமாக உங்களால் மொத்த சக்திபீடங்களையும் தரிசிக்கமுடியும். சில பீடங்கள் தரிசிக்கமுடியாதவையாக உங்களுக்குத் தோன்றும். ஆனால் முடியாதது என்ற ஒன்று இவ்வுலகில் கிடையாது. அன்னையின் பரிபூரண அருள் உங்களுக்கு இருந்தால் அவளே அனைத்தையும் உங்களுக்குக் காட்டியருள்வாள்.

ஓம் சக்தி.

நன்றி - மயூரமங்கலம்.

search tags : shathipeedam, shathibeedam, shakthi, சக்திபீடங்கள்

Saturday, February 21, 2009

நவரத்தினங்கள்



நவரத்தினங்களையும் அவற்றினால் கிடைக்கும் பயன்களையும், அவற்றின் இராசி அதிபதிகளையும் பார்க்கலாம் வாருக்கள்.

நவரத்தினத்தின் பெயர் (In English) - இராசி அதிபதி - பலன்

1. முத்து (Pearl) - சந்திரன் - நல்ல முத்து ஆனது மனநோய், மனவளர்ச்சியின்மை, தொண்டை சம்பந்தமான கோளாறுகள், சுவாசக் கோளாறுகள் போன்றவற்றைத் தீர்த்துவைக்கும்.

2. மரகதம் (Emerald) - புதன் - இது சோம்பல், தூக்கமின்மை, பசியின்மை போன்றவற்றையும் கண், நரம்பு,முதுகு தொடர்பான கோளாறுகளையும் தீர்க்கும்.

3. வைரம் (Diamond) - வெள்ளி/சுக்கிரன் - இது பாலியல் நோய்கள் மற்றும் சரும வியாதிகளைப் போக்கும் தன்மை கொண்டது.

4. பவளம் (Red Coral/Coral) - செவ்வாய் - இது வலிப்பு, குழந்தையின்மை, விரை வீக்கம், குடலிறக்கம் மற்றும் கல்லீரல் கோளாறினைத் தீர்க்கும்.

5. வைடூரியம் (Cat's Eye Chrysoberyl) - கேது - இது சளி மற்றும் கபத்தினை நீக்கி உடலுக்கு அழகைக் கொடுக்கும்.

6. கோமேதகம் (Hessonite) - இராகு - இது வாயு மற்றும் பாலியல் கோளாறுகளை நிவர்த்தி செய்யும்.

7. புஷ்பராகம் (Yellow sapphire) - வியாழன்/குரு - இது கணையம், கல்லீரல் தொடர்பான வியாதிகளையும், வயிற்றுக் கோளாறு, அஜீரணம் போன்றவற்றையும் குணப்படுத்தும்.

8. நீலக்கல் (Blue sapphire) - சனி - இது வாதம் மற்றும் சிறுநீரகக் கோளாறு போன்றவற்றைத் தீர்க்கும்.

9. மாணிக்கம் (Ruby) - சூரியன் - இது இரத்தச் சோகை, உடல் நலிவு, இருதயக் கோளாறு மற்றும் கண்நோய் போன்றவற்றைத் தீர்க்கும்.

search tags : navarathinam, 9 gems, நவரத்தினம், இரத்தினங்கள்

Friday, February 20, 2009

பயனுள்ள தகவல்கள்-1

* தியானத்தின் போது மூளை அணுக்களின் பலம் கூடுகிறது. தினமும் பதினைந்து நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டியது அவசியமாகும். காலையிலோ மாலையிலோ எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். தியானத்தின் போது அவசரம் இருக்கவே கூடாது. ஏதாவது ஒரு வேலையச் செய்ய மனதில் நினைத்துக் கொண்டு தியானம் செய்ய ஆரம்பிக்கக் கூடாது. உணவு உட்கொள்வதற்கு முன் செய்ய வேண்டும். உண்ட பின் மூன்று மணிநேர இடைவெளியின் பின் தியானம் செய்யலாம்.

* யார் வாழை இலையில் சாப்பிட்டு வருகிறார்களோ அவர்களுக்குத் தலைமுடி கறுப்பாகவே இருக்கும். சீக்கிரத்தில் நரைக்காது. வாழையிலையில் தனலஷ்மி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. வறுமை, கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால் வாழை இலையிலேயே சாப்பிட வேண்டும். இப் பழக்கம் மேற்கொண்டவர்கள் லஷ்மி கடாட்சம் பெறுவார்கள் என்பது திண்ணம். அத்துடன் வாழை இலையில் சாப்பிடுவதால் முகம் பளபளப்பாகி அழகும் வசீகரமும் உண்டாகும். பித்த - சிலேட்டும வியாதிகள் தணியும். ( தற்போது வாழை இலை கிராம பகுதிகளில்தான் கிடைக்கின்றது, பண்டிகை நாட்களில் நகரத்தில் கிடைக்கின்றது. மேலைநாடுகளிலோ இலை கிடைப்பது இன்னமும் அரிது. ஆகையால் வாழை இலை கிடைக்கக் கூடியவர்கள் மட்டும் வாழை இலையில் உண்பது நன்று. இலை கிடைத்தும் உண்ணாது இருத்தல் போல் ஒரு அறிவற்ற செயல் வேறு எதுவும் இருக்கமுடியாது. இலை கிடைக்காதவர்கள் அவர்கள் முறைப்படியே உணவருந்தலாம். தவறில்லை.)

* சுமங்கலிப் பெண்கள் ஸ்நானம் செய்யும் போது வெறும் தலையில் குளிக்கக் கூடாது. சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டுதான் தலை முழுக வேண்டும்.

* துளசி மாடத்திலிருந்து பூஜைக்கு வேண்டிய துளசியை ஒடிக்கக்கூடாது. துளசி மாடம் பூஜைக்குரியது. பூஜைத் தேவைக்கு வேண்டிய துளசியை தனியாக வேறு துளசிச் செடிகளில் இருந்து பறிக்க வேண்டும்.

* சுபகருமங்களுக்கெல்லாம் முதல் தேவையான பொருள் மஞ்சள், மங்கல கருமங்களுக்கு சிட்டை எழுதும்போது முதலில் எழுதப்படுவது மஞ்சள்தான்.

* மஞ்சள் பூசிக்குளிப்பது சுமங்கலிகள் மரவு. மஞ்சள் பூசிக் குளித்துவர துர்நாற்றம், தூக்கமின்மை என்பன அற்றுப் போகும். முக வசீகரமுண்டாகும்.

* இல்லங்களில் காலை, மாலை மஞ்சள் நீர் தெளித்து வர லஷ்மி கடாட்சமுண்டாகும்.

* கணபதி, சூரியன், அம்பிகை, மஹாவிஷ்ணு, பரமசிவன் ஆகிய ஐந்து மூர்த்திகளையும் ஒரேயிடத்தில் வைத்துப் பூஜிப்பதே பஞ்சாயன பூஜையாகும்.

சூரியனால் உடலாரோக்கியம் பெற்று அம்பிகை ஆகிய தாயின் ஆசியால் கிடைக்கும் சிறந்த வாழ்வை அடைந்து விஷ்ணுவினால் இம்மையின்பம் பெற்று சிவபிரானால் காமக் குரோதாதி புறப்பகைகளை வென்று அஞ்ஞானம் நீக்கி மோஷத்தை அடைவதற்கு வாழ்வில் வரும் தடைகளை கணபதி அருளால் நீக்கி நற்கதி அடைவதே பஞ்சாயதன பூஜைச் சிறப்பாகும்.

* வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்வது நல்லதல்ல. இதனால் லஷ்மிதேவி சஞ்சலமான நிலையைப் பெற்று வீட்டிலுள்ளவர்களின் ஐஸ்வர்யங்களை ஏற்றத்தாழ்வுக்கு இடமாக்குவாள்.

* தீபத்தின் ஜூவாலை கிழக்குமுகமாக இருந்தால் சர்வபீஷ்டங்களும் ஐஸ்வரியமும் உண்டாகும். வடக்கு முகமாக எரிந்தால் நோய் நீங்கிச் சுகமுண்டாகும். வடகிழக்கு முகமானால் ஷேமலாபமுண்டாகும்.

* மேல் நோக்கி நெடிதாயெரியும் ஜூவாலை ஆரோக்கியத்திற்கும் சரீர சுக போகங்களுக்கும் அறிகுறியாகும்.

* சக்தி, திறமை, வீர்யம் இவற்றைச் சகல ஜீவராசிகளுக்கும் வழங்கி என்றும் மாறா இளமையுடன் திகழ்வது சூரியன். சூரிய வழிபாடு கர்மவினைகளையும், நாகதோஷம் முதலியவற்றையும் பிற சோதிடரீதியான தோஷங்களையும் நீக்கும்.

* சூரிய வழிபாடு கண்பார்வை விருத்திக்கும், இரத்த விருத்திக்கும் உகந்ததென விஞ்ஞானம் நிரூபிக்கின்றது. உடலில் சூரியஒளி படுவதால் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு ஆயுள் கூடும். விற்றமின் டி சூரியனின் ஒளியில் உண்டு. இதனால்தான் மேலைநாட்டவர் சூரிய குளிப்பு செய்கின்றனர்.

* குழந்தைகள் பிறந்தபின் ஜாதகர்மம், நாமகரணம் என்பவற்றின் போது உபநிஷ்க்ரமணம் என்ற கிரியையில் குழந்தையை சூரிய வெளிச்சம் படும்படி முதன்முதல் வீட்குக்கு வெளியே கொண்டுவருதல் உண்டு. உடல்முழுதும் நல்லெண்ணய் பூசி வெற்றுடம்புடன் இளவெயிலில் கிடத்துதலும் குறிப்பிடத்தக்கது.

* இல்லங்களில் மாலைநேரத்தில் விளக்கேற்றும்போது பூஜையறை ஜன்னலை மூடிவிட வேண்டும். வீட்டின் முன்புற வாசலை திறந்திருத்தலும், பின்பக்க வாசலை பூட்டியிருத்தலும் வேண்டும்.

* வழிபாடு முடிந்த பின் விளக்குச் சுடர் மீது சில அட்சதை மணிகளைத்தூவி அல்லது மலரொன்றை வைத்து மெதுவாக அணைத்து விடலாம். வீசி அணைத்தலும் ஊடுபற்றி எரிய விடுதலும் ஆகாது.

* அரசமரம் வழிபாட்டுக்கு உகந்ததெனினும் சனிக்கிழமை காலை வேளையில் மட்டுமே அதைப் பிரதஷணம் செய்வதும் தொட்டு வணங்குவதும் செய்யலாம். அந்நாளில் மட்டுமே லஷ்மி நாராயணரின் பிரசன்னம் அங்கு இருக்கும். மற்ற நாட்களில் தொட்டால் மூதேவியே பீடிப்பாள்.

* சமுத்திர ஸ்நானம் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே செய்யலாம்.

search tags : article, பயனுள்ளவை, தகவல்

சிவராத்திரி எப்போது

வருகின்ற திங்கட்கிழமை அதாவது 23/02/2009 அன்று மஹா சிவராத்திரி விரதம் வருகின்றது.

இவ் விரதம் இருக்க விரும்பும் அன்பர்கள் நாளை அதாவது ஞாயிற்றுக்கிழமை 22/02/2009 அன்று ஒரு பொழுது உணவு அருந்தி, சிவராத்திரியன்று முழு உபவாசம் இருந்து இரவில் துயில் கொள்ளாது சிவபெருமானை வழிபடுங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்.

வருடத்திற்கு ஒரு முறை வரும் மகாவிரதம் இது, அதனால் தவறவிட்டுவிடாதீர்கள்.

அத்தோடு நாளை ஞாயிற்றுக்கிழமை பிரதோஷவிரதம் என்பதையும் நினைவிற் கொள்ளுங்கள்.

நன்றி.

தொடர்புடைய பதிவு : மஹா சிவராத்திரி

Thursday, February 19, 2009

மஹா சிவராத்திரி


இதோ இந்த ஆண்டிற்கான மஹாசிவராத்திரி விரதம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நல்ல நாளைப் பற்றித் தெரிந்து கொள்வோமா...

மஹாசிவராத்திரி என்றால் சிவனுக்கு மிகவும் உகந்த இராத்திரி எனப் பொருள்படும். சிவ விரதங்களிலாகட்டும் அல்லது மற்றைய விரதங்களிலாகட்டும் இச் சிவராத்திரி விரதத்திற்கு தனியிடமும் தனிச்சிறப்பும் உண்டு. சிவம் என்றால் வடமொழியில் இன்பம் எனப் பொருள் உண்டு. இராத்திரி என்றால் இரவு. ஆக சிவராத்திரிக்கு இன்பமயமான இரவு என்றும் பொருளுண்டு.

சிவராத்திரியில் சில வகைகள் உண்டு. மாத சிவராத்திரி என்ற பெயரில் மாதந்தோறும் சிவராத்திரி விரதங்கள் வருகின்றபோதும் இவற்றை அனுஷ்டிப்போர் மிகக் குறைவானவர்களே. மாதந்தோறும் தேய்பிறைச் சதுர்த்தசியிலே மாத சிவராத்திரியும், அமாவாசையும் சோமவாரமும் கூடிய தினத்தில் யோக சிவராத்திரியும் வரும். நாம் இப்போது மஹாசிவராத்திரியைப் பற்றிப் பார்க்கலாம்.

இம் மஹாசிவராத்திரி விரதமானது மாசி மாத தேய்பிறைச் சதுர்த்தசியிலே கைக்கொள்ளப்படுகின்றது. வயது வேறுபாடு இன்றி அனைவராலும் இவ்விரதத்தை அனுட்டிக்கமுடியும். இந் நன்னாளில் விரதம் இருந்து பலர் பலவகையான நற்பலன்களைப் பெற்றுள்ளனர். உதாரணத்திற்கு சூரியன், விஷ்ணு, பிரம்மா, மன்மதன், யமன், இந்திரன், சந்திரன், அக்கினி, குபேரன் ஆகியோரைக் குறிப்பிடமுடியும்.

இப்படிப்பட்ட இம் மகாவிரதம் எப்படி ஏற்பட்டது தெரியுமா. அதற்கு பல புராணகதைகளைக் கூறுவர். அதில் முக்கியமான சில கதைகளைப் பார்ப்போம்.

ஒரு சமயம் படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கும், காத்தற் கடவுளான திருமாலுக்கும் இடையில் கடும் போட்டி ஒன்று ஏற்பட்டது. இருவரும் தம்மைத் தாமே பெரியவர் எனக் கூறிக்கொண்டனர். இவர்களின் இப்பிரச்சனை தீர்வதற்குப் பதில், நேரம் செல்ல செல்ல மிகக் கடுமையாகிக் கொண்டே சென்றது. அப்போது திடீரென்று அவ்விடத்தில் ஒரு ஒளிப்பிழம்பு தோன்றியது. அதன் அடியையும் முடியையும் காணமுடியவில்லை. அத்தனை தூரம் பெரியதாக இருந்தது. அச் சோதிப்பிழம்பில் இருந்து ஒரு அசரீரி கேட்டது. இதன் அடியையோ அல்லது முடியையோ யார் காணுகின்றார்களோ அவரே பெரியவர் என அவ்வசரீரி கூறிற்று. யார் பெரியவர் எனப் போட்டி போட்டுக்கொண்டு இருந்த திருமாலும் பிரம்மாவும் முறையே அடியையும் முடியையும் தேடிப் புறப்பட்டனர். திருமால் வராக உருக்கொண்டு பூமியைத் துளைத்துக் கொண்டு அடியைத் தேடிச் சென்றார். பிரம்மா அன்னப்பட்சியாக உருக்கொண்டு முடியைத் தேடிச் சென்றார். இருவரும் பலகாலம் தேடியும் அடியையோ முடியையோ காணமுடியவில்லை. இறுதியில் இருவரும் தம் தோல்வியை ஒப்புக்கொண்டனர். தாம் வெறும் கருவிகள் என்பதையும் தம்மை இயக்குபவர் அப்பரம்பொருளான சிவபெருமானே என்பதையும் உணர்ந்தனர். அவர்களின் செருக்கையடக்கி அவர்களை மன்னித்த சிவபிரான் அச்சோதி வடிவம் தோன்றிய அந்நாளை மஹாசிவராத்திரியாகக் கொண்டாடும்படி கூறினார்.

இரண்டாவது கதை, ஒரு உலகமுடிவு நாளில்(அதாவது பிரளயகாலத்தில்) பிரம்மதேவன் மறைய சர்வான்மாக்களும் இறந்து போயின. அந்த இராப் பொழுதில் உமாதேவியார் சிவனைப் பூசித்து , பெருமானுடைய அருளைப் பெற்றார். அத்தோடு அந்த இராப்பொழுதில் விரதம் இருப்பவர் யாராக இருந்தாலும் அவர்கள் மோட்சமடைய வேண்டுமெனவும் வரம் பெற்றார். உமாதேவியார் வரம் பெற்ற அந்த இரவே மஹாசிவராத்திரி என்றும் கூறுவர்.

இவ்வாறாகத்தான் சிவராத்திரி தோற்றம் பெற்றதென்பர் பெரியோர். எப்படியாக இருந்தாலும் இந்த மஹாசிவராத்திரி விரதம் மிகவும் புண்ணியமானதொன்று. உதாரணத்திற்கு ஒரு வேடன் கதையைக் கூறுவர். ஒரு காட்டில் ஒரு வேடன் இருந்தான். மிருகங்களை வேட்டையாடுவதுதான் அவன் குலத்தொழில். ஒரு நாள் அவன் வேட்டையாடப் புறப்பட்டான். காலையில் இருந்து முயற்சி செய்தும் ஒன்றும் சிக்கவில்லை. அதனால் மிருகங்களைத் தேடிக்கொண்டே காட்டின் உட்பகுதிக்குச் சென்றுவிட்டான். சூரியன் மறையத் தொடங்கியும் ஒன்றும் கிடைக்கவில்லை. அதனால் அவன் அன்று பகல் முழுதும் பட்டினி. இனி அவனால் தன் இடத்திற்குத் திரும்பிச் செல்லமுடியாது. நாளை காலையில்தான் செல்லமுடியும். எனவே இரவுப் பொழுதை அந்நடுக்காட்டிலேயே கழிக்கத் தீர்மானித்தான். அவ்விரவில் துஷ்ட மிருகங்களிடம் இருந்து தப்புவதற்காக அங்கிருந்த மரம் ஒன்றில் ஏறிக்கொண்டான். அம்மரத்தில் ஏறினாலும் தூங்கி விழுந்து விடாமல் இருக்கவேண்டுமே, அதற்காக அம்மரத்தில் இருந்த இலைகளை ஒவ்வொன்றாக கீழே பறித்துப் போட்டுக்கொண்டிருந்தான். அவன் ஏறிய அம்மரம் ஒரு வில்வமரம். அவன் பிடுங்கிக் கீழே போட்ட ஒவ்வொரு வில்வ இலையும் மரத்தின் கீழே இருந்த சிவலிங்கத்தின் மேல் விழுந்தது. ஆனால் வேடனுக்கு இதைப்பற்றியெல்லாம் தெரியாது. அவன் விடியும் வரை அவ்வாறே இலைகளைப் பறித்துப் போட்டுக்கொண்டிருந்தான். பகலிலும் பட்டினி, இரவிலும் பட்டினி. மறுநாள் காலை ஆனது. எம்பெருமான் அவன் முன் தோன்றினார். காரணம் அவன் இருந்த பட்டினியை எம்பெருமான் விரதமாகவும், அவன் தூக்கம் வராமல் இருக்க செய்த வேலையை வில்வ அர்ச்சனையாகவும் ஏற்றுக்கொண்டார். அவனுக்கு முக்தியின்பத்தை அளித்தார். அவ்வேடன் தெரியாமற் செய்த அப்புண்ணியம் எத்தனை பெரிய பலனைக் கொடுத்தது பார்த்தீர்களா. இதையே நாம் தெரிந்து செய்தால் எவ்வளவு பலன் ஏற்படும்.

இப்போது இவ்விரதத்தினை எப்படி அனுட்டிப்பது எனப் பார்ப்போம். சிவராத்திரிக்கு முதல்நாளில் ஒரு பொழுது உணவருந்தி, மஹாசிவராத்திரியன்று உபவாசம் இருந்து அதாவது உணவை முற்றிலும் தவிர்த்து, அன்று இரவு முழுவதும் துயில் கொள்ளாது, மறு நாள் அதிகாலையில் நித்தியகருமங்களை முடித்து எட்டரை மணிக்கு முன்னதாக பாரணை செய்யவேண்டும். பாரணை செய்தல் என்றால் உணவருந்துதல்.

அதாவது சிவராத்திரி தினத்தன்று காலையில் இருந்தே சிவசிந்தனையிலும், சிவபஜனைகளிலும் மனத்தை ஈடுபடுத்த வேண்டும். பின் மாலை 6 மணியளவில் அருகில் இருக்கும் சிவ ஆலயத்திற்குச் சென்று அங்கு நடைபெறும் நான்கு ஜாம பூஜைகளையும் கண்டுகளிக்க வேண்டும். இது நம் பாவங்களையெல்லாம் நசித்து நமக்கு பிறவாவரமளிக்கும். இவ்வாறு இரவு முழுதும் விழித்திருக்க முடியாதவர்கள், இரவு 11.30 தொடக்கம் 12.15 வரை இருக்கும் லிங்கோற்பவகாலம் வரையிலாவது விழித்திருக்கவேண்டும். அவர்களுக்கும் ஐயன் அருள்புரிவார்.

இன்றைய காலகட்டத்தில் இரவு முழுதும் விழித்திருக்கவேண்டும் என்பதை பலர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். இரவுமுழுதும் எப்படியாவது இருந்து விட்டால் புண்ணியம் கிடைத்துவிடும் எனக் கருதுகின்றனர். அதனால் சிலர் சீட்டாடுகின்றனர், சிலர் சினிமாப்படங்களைப் பார்க்கின்றனர், இன்னும் சிலர் வீண் பேச்சுக்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் நோக்கம் விடியும் வரை தூங்காமல் இருந்து புண்ணியத்தினைச் சம்பாதிக்கவேண்டும் என்பதே. ஆனால் அவர்கள் இவ்வாறு இருப்பது மகா பாவமான செயலாகும். அவர்கள் புண்ணியத்திற்குப் பதில் பெரும்பாவத்தினைத்தான் சேர்க்கின்றார்கள். இவ்வாறான செயல்களில் ஈடுபடுதல் குளிக்கப் போய் சேறு பூசுவதற்குச் சமானமாகும். நம் பாவங்களைக் கழுவும் இந் நல்ல நாளில் தகாத செயல்களில் ஈடுபட்டு மேன்மேலும் ஏன் பாவத்தைச் சேர்க்கவேண்டும்?. எனவே சிவராத்திரியன்று சொன்னால் சிவநாமங்களைச் சொல்லுங்கள், செய்தால் சிவகாரியங்களைச் செய்யுங்கள். தேவையற்ற காரியங்களையும், வீண் பேச்சுக்களையும் தவிர்த்து விடுங்கள்.

இந் நல்ல நாளில் நான்கு ஜாம பூஜைகளுக்குத் தேவைப்படும் அபிஷேகத் திரவியங்களை வாங்கிக் கொடுத்தல் மிகவும் புண்ணியமான செயலாகும். எனவே முடிந்தோர் அபிஷேகத் திரவியங்களான பால், தேன், பன்னீர் போன்றவற்றை வாங்கிக் கொடுங்கள். நான்கு ஜாமப் பூஜைகளும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனும் கரணங்கள் நான்கையும் சிவன் திருவடியிற் சேர்த்தலைக் குறிக்கின்றது. ஆலயம் செல்லமுடியாதோர் வீட்டில் இருந்தே வழிபடலாம். தவறில்லை. வீட்டில் இருந்து சிவபுராணங்களையும், தேவாரங்களையும், சிவகதைகளையும் படியுங்கள்.

இவ் விரதத்தினை 6 வருடங்களுக்காவது, 12 வருடங்களுக்காவது, அல்லது 24 வருடங்களுக்காவது தொடர்ந்து கைக்கொள்ளுதல் சிறப்பு. மஹாசிவராத்திரி விரதத்தைப் பற்றி பேசுவோருக்கு யமபயம் இல்லை. பல யாகங்களைச் செய்வதைக் காட்டிலும் இவ்விரதத்தை அனுஷ்டிப்பது மிகவும் புண்ணியமாகும். சிவராத்திரி விரதத்தால் கிடைக்கும் நற்பயன் கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினாற்கூட கிட்டாது.சிவராத்திரிக்கு ஒப்பான வேறு சிறந்த விரதம் இல்லை. இவ்வாறு பரமசிவனார் பார்வதிதேவிக்கு இவ்விரதம் பற்றி எடுத்துரைத்ததாக புராணங்கள் கூறுகின்றன.

சிவராத்திரியன்று சொல்லக்கூடிய சில மந்திரங்கள்:

ஸ்ரீ பவாய நம
ஸ்ரீ சர்வாய நம
ஸ்ரீ ருத்ராய நம
ஸ்ரீ பசுபதயே நம
ஸ்ரீ உக்ராய நம
ஸ்ரீ மகா தேவாயை நம
ஸ்ரீ பீமாயை நம
ஸ்ரீ ஈசாநாய நம


search tags : sivarathiri, shivarathiri, shivan, சிவராத்திரி, விரதம், நோன்பு

தொடர்புடைய பதிவு : திருவாசகம்

விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பல இசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழகு எறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழ் ஒளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழம் நுகரும் மூஷீக வாகன!

இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந்து அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடந்து

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறாதாரத்து அங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையில் கழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற் சக்கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முகமாக இனிதெனக்கு அருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினிற் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்தே
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக்கு ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில்

எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள் வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துக்

தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக! விரைகழல் சரணே!

search tags : vinayagar, agaval, pillayar, விநாயகர், பதிகம், அகவல்.

தொடர்புடைய பதிவு : விநாயகர் காரியசித்தி மாலை

திருவாசகம்

திருச்சிற்றம்பலம்.

தொல்லை யிரும்பிறவி சூழுந்தளை நீக்கி
அல்லலறுத்தானந்தம் ஆக்கியதே
எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னுந் தேன்.

நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க!
ஆகமம், ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன், அநேகன், இறைவன் அடி வாழ்க!

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன்கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன்கழல் வெல்க!

ஈசன் அடி போர்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீர்ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்,
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை,
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன்யான்

கண்நுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்துஎய்தி
எண்ணுதற்கு எட்டா எழில்ஆர் கழல் இறைஞ்சி,
விண்நிறைந்து, மண்நிறைந்து மிக்காய்விளக்கு ஒளியாய்
எண் இறந்து, எல்லை இலாதானே! நின் பெரும் சீர்
பொல்லா வினையேன், புகழும் ஆறு ஒன்று அறியேன்;

புல்லாகி, பூடாய், புழுவாய், மரமாகிப்
பல்விருகம் ஆகி, பறவையாய், பாம்பாகி
கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்,
வல் அசுரர் ஆகி, முனிவராய்த் தேவராய்,
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம் பெருமான்!
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரம் ஆய்நின்ற
மெய்யா! விமலா! விடைப்பாகா! வேதங்கள்
'ஐயா' என ஓங்கி, ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!

வெய்யாய்! தணியாய்! இயமானன் ஆம் விமலா!
பொய்ஆயின எல்லாம் போய்அகல வந்தருளி
மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே!
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்அறிவே!

ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து உலகும்
ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய் அருள் தருவாய்,
போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நிப்தொழும்பில்
நாற்றத்தின் நேரியாய்! சேயாய்! நணியானே!
மாற்றம், மனம்கழிய நின்ற மறையோனே!

கறந்தபால் கன்னலொடு, நெய்கலந்தாற் போலச்
சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று,
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்!
நிறங்கள் ஓர் ஐந்துடையாய்! விண்ணோர்கள் ஏத்த
மறைந்துஇருந்தாய் எம் பெருமான்! வல்வினையேன் தன்னை

மறைந்திட மூடிய மாய இருளை,
அறம், பாவம், எனும் அரும் கயிற்றால் கட்டி,
புறம்தோல் போர்த்து, எங்கும் புழுஅழுக்கு மூடி,
மலம்சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன்ஐந்தும் வஞ்சனையைச் செய்ய

விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
கலந்த அன்பாகி, கசிந்துஉள் உருகும்
நலம்தான் இலாத சிறியேற்கு நல்கி,
நிலம்தன்மேல் வந்தருளி, நீள் கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு

தாயிற் சிறந்த தயாஆன தத்துவனே!
மாசுஅற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே!
தேசனே! தேன்ஆர் அமுதே! சிவபுரனே
பாசம்ஆம் பற்றுஅறுத்து, பாரிக்கும் ஆரியனே!
நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,

பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆர்உயிராய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே!

அன்பருக்கு அன்பனே! யாவையும் ஆய், அல்லையும் ஆய்
சோதியனே! துன்இருளே தோன்றாப் பெருமையனே!
ஆதியனே! அந்தம் நடுஆகி, அல்லானே!
ஈர்த்துஎன்னை, ஆட்கொண்ட எந்தை பெருமானே!
கூர்த்தமெய்ஞ் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின்

நோக்கரிய நோக்கே! நுணுகுஅரிய நுண்உணர்வே!
போக்கும், வரவும், புணர்வும் இலாப் புண்ணியனே!
காக்கும்எம் காவலனே! காண்பரிய பேர்ஒளியே!
ஆற்றுஇன்ப வெள்ளமே! அத்தா! மிக்காய் நின்ற
தோற்றச் சுடர்ஒளி ஆய், சொல்லாத நுண்உணர்வு ஆய்

மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறேவந்து அறிவுஆம்
தேற்றனே! தேற்றத் தெளிவே என சிந்தனையுள்
ஊற்றுஆன உண்ஆர் அமுதே! உடையானே!
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன்! "எம் ஐயா", "அரனே!ஓ" என்று என்று

போற்றிப் புகழ்ந்திருந்து, பொய்கெட்டு, மெய்ஆனார்
மீட்டு இங்கு வந்து, வினைப்பிறவி சாராமே,
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே!
நள்இருளில் நட்டம் பயின்றுஆடும் நாதனே
தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே!

அல்லல் பிறவி அறுப்பானே! ஓ! என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லி, திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்,
பல்லோரும் ஏத்தப் பணிந்து.

திருச்சிற்றம்பலம்

search tags : thiruvasagam, namashivaya, shivan, manikavasagar, மாணிக்கவாசகர், திருவாசகம், தேவாரம்.

கந்தர்சஷ்டி கவசம்

அமரரிடர் தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி.

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
நிட்டையுங்கை கூடும் நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசந் தனை.

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவுஞ் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட
மைய நடஞ்செயும் மயில்வா கனனார்

கையில் வேலாலெனைக் காக்கவென்று வந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக

வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக

சரவண பவனார் சடுதியில் வருக
ரவண பவச ரரரர ரரர
ரிவண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரவ வீரா நமோ நம
நிபவ சரவண நிறநிற நிறென

வசர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை யாளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க

விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயுங் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்
கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்

சண்முகன் தீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகந்தினம் வருக
ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ் வாயும்

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈரறு செவியில் இலகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ டணமும் பதக்கமுந் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்னம் பதித்த நற்சீ ராவும்
இருதொடை யழகும் இணைமுழந் தாளும்

திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண

ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்கு
விந்து விந்து மயிலோன் விந்து

முந்து முந்து முருகவேல் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதனென் ( று )

உந்திரு வடியை உறுதியென் றெண்ணும்
என்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க
விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க
நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க

முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்ன வடிவேல் காக்க

சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க

வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க
கைகள் இரண்டும் கருணைவேல் காக்க

முன்கை இரண்டும் முரண்வேல் காக்க
பின்கை இரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரசுவதிநற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராக் கதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசிகாட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளங் களும்
என் பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட
ஆனை அடியினில் அரும்பா வைகளும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டிய பாவையும் ஒட்டிய செருக்கும்

காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதுமஞ் சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட் டலறி மதிகெட் டோடப்
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டு உருட்டு கால்கை முறியக்

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில்செதி லாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச்ச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்

பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடுவிடு வேலை வெருண்டது ஓடப்
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியுங் கரடியும் இனித்தொடா தோடத்

தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்

சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்குற வாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா ( க )
மண்ணா ளரசரும் மகிழ்துற வாகவும்

உன்னைத் துதிக்க உந்திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொழி பவனே
அரிதிரு மருகா அமரா பதியைக்

காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா

கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை

நேச முடன்யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்

சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் முருகா
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்

வாழ்க வாழ்க வாரணத் துவசன்
வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரியம் அளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய

பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேச முடனொரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டி கவசம் இதனைச்

சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய
அட்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர்

மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவக்கோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டா வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை

வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி

அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த
குருபரன் பழனிக் குன்றினி லிருக்கும்

சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி

திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே

மயில்நடம் இடுவோய் மலரடி சரணம்
சரணஞ் சரணஞ் சரவணபவ ஓம்
சரணஞ் சரணஞ் சண்முகா சரணம்.


கந்தர் சஷ்டி கவசம் முற்றிற்று.

இதனுடைய mp3 பாடலை தரவிறக்க : தரவிறக்க(Download)

search tags: murugan, kanthan, kanthar shasti kavasam, கந்தர்சஷ்டி கவசம், கவசம்

Wednesday, February 18, 2009

அறுபத்துநான்கு கலைகள்

நம்மில் பலர் 64 கலைகள் உண்டு என அறிந்திருப்பீர்கள். ஆனால் அவற்றின் பெயர்களை நீங்கள் அறிவீர்களா?

இதோ உங்களுக்காக அன்னை சரஸ்வதி அருளும் அறுபத்துநான்கு கலைகளும்......

அறுபத்துநான்கு கலைகள்:

1 - அக்கர இலக்கணம்
2 - இலிகிதம்
3 - கணிதம்
4 - வேதம்
5 - புராணம்
6 - வியாகரணம்
7 - நீதி சாஸ்திரம்
8 - சோதிட சாஸ்திரம்
9 - தரும சாஸ்திரம்

10 - யோக சாஸ்திரம்
11 - மந்திர சாஸ்திரம்
12 - சகுன சாஸ்திரம்
13 - சிற்ப சாஸ்திரம்
14 - வைத்திய சாஸ்திரம்
15 - உருவ சாஸ்திரம்
16 - இதிகாசம்
17 - காவியம்
18 - அலங்காரம்
19 - மதுரபாடனம்
20 - நாடகம்

21 - நிருத்தம்
22 - சக்தபிரமம்
23 - வீணை
24 - வேணு
25 - மிருதங்கம்
26 - தாளம்
27 - அத்திர பரீஷை
28 - கனக பரீஷை
29 - இரத பரீஷை
30 - கஜ பரீஷை

31 - அசுவ பரீஷை
32 - இரத்தின பரீஷை
33 - பூ பரீஷை
34 - சங்கிராம இலக்கணம்
35 - மல்யுத்தம்
36 - ஆகருஷணம்
37 - உச்சாடனம்
38 - வித்துவேஷணம்
39 - மதன சாஸ்திரம்
40 - மோகனம்

41 - வசீகரணம்
42 - இரசவாதம்
43 - காந்தர்வவாதம்
44 - பைபீலவாகம்
45 - கௌத்துகவாதம்
46 - தாது வாதம்
47 - காருடம்
48 - நாட்டம்
49 - முட்டி
50 - ஆகாயப் பிரவேசம்

51 - ஆகாயமனம்
52 - பாகாயப் பிரவேசம்
53 - அதிரிச்சயம்
54 - இந்திர ஜாலம்
55 - மகேந்திர ஜாலம்
56 - அக்கினித் தம்பம்
57 - ஜலஸ்தம்பம்
58 - வாயுத் தம்பம்
59 - திட்டித் தம்பம்
60 - வாக்குத் தம்பம்

61 - சுக்கிலத் தம்பம்
62 - கன்னத் தம்பம்
63 - கட்கத்தம்பம்
64 - அவத்தைப் பிரயோகம்.

( நன்றி : மயூரமங்கலம் )

search tags: 64kalaigal, அறுபத்துநான்கு கலைகள், ஆயகலைகள்

விநாயகர் காரியசித்தி மாலை

பந்தம் அகற்றும் அனந்த குணப்
பரப்பும் எவன் பால் உதிக்குமோ,
எந்த உலகும் எவனிடத்தில்
ஈண்டி இருந்து சுரக்குமோ,
சந்த மறை ஆகமங் கலைகள்
அனைத்தும் எவன் பால் தகவருமோ,
அந்த இறையாம் கணபதியை
அன்பு கூறத் தொழுகின்றோம்.

உலகம் முழுதும் நீக்கமற
ஒன்றாய் நிற்கும் பொருள் எவன், இவ்
உலகில் பிறக்கும் விகாரங்கள்
உறாத மேலாம் ஒளியாவன்,
உலகம் புரியும் வினைப்பயனை
ஊட்டும் களைகண் எவன், அந்த
உலக முதலைக் கணபதியை
உவந்து சரணம் அடைகின்றோம்.

இடர்கள் முழுதும் எவன் அருளான்
எரிவீ ழும்பஞ்சு எனமாயும்,
தொடரும் உயிர்கள் எவன் அருளால்
சுரர் வாழ் பதியும் உறச்செய்யும்,
கடவுள் முதலோர்க்கு ஊறு இன்றிக்
கருமம் எவனால் முடிவுறும், அத்
தடவு மருப்புக் கணபதி பொன்
சரணம் சரணம் அடைகின்றோம்.

மூர்த்தி யாகித் தலமாகி
முந்நீர் கங்கை முதலான,
தீர்த்தம் ஆகி அறிந்து அறியாத்
திறத்தி னாலும் உயிர்க்கு நலம்,
ஆர்த்தி நாளும் அறியாமை
அகற்றி அறிவிப் பான்எவன், அப்
போர்த்த கருணைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

செய்யும் வினையின் முதல்யாவன்
செய்யப் படும் அப் பொருள் யாவன்,
ஐயம் இன்றி உளதாகும்
அந்தக் கருமப் பயன் யாவன்,
உய்யும் வினையின் பயன் விளைவில்
ஊட்டி விடுப்பான் எவன், அந்தப்
பொய்யில் இறையைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

வேதம் அளந்தும் அறிவரிய
விகிர்தன் யாவன், விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும்
விமலன் யாவன், விளங்கு பர
நாத முடிவில் வீற்றிருக்கும்
நாதன் எவன், எண் குணன் எவன், அப்
போத முதலைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

மண்ணில் ஓர் ஐங் குணமாகி
வதிவான் எவன், நீர் இடைநான்காய்
நண்ணி அமர்வான் எவன், தீயின்
மூன்றாய் நவில்வான் எவன், வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி
இயைவான் எவன், வான் இடை ஒன்றாம்,
அண்ணல் எவன், அக் கணபதியை
அன்பிற் சரணம் அடைகின்றோம்.

பாச அறிவில் பசு அறிவில்
பற்றற்கு அரிய பரன்யாவன்,
பாச அறிவும் பசு அறிவும்
பயிலப் பணிக்கும் அவன் யாவன்,
பாச அறிவும் பசு அறிவும்
போற்றி மேலாம் அறிவான
தேசன் எவன், அக் கணபதியைத்
திகழச் சரணம் அடைகின்றோம்.

search tags: விநாயகர், காரியசித்திமாலை, vinayagar, kariyachimalai

தொடர்புடைய பதிவு : விநாயகர் அகவல்

Related Posts Widget for Blogs by LinkWithin