ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Friday, April 24, 2009

ஸ்ரீ குமாரஸ்தவம்

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளால் அருளப்பெற்ற பதிகம் இது. மிகுந்த சக்தி பெற்றது. இப் பதிகத்தினைப் பாராயணம் செய்ய சில விதிமுறைகளை அன்பர்கள் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும் என இப்பதிகம் உள்ள நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ் விதிமுறைகள் :

1. திருநீறு அணிந்து கொண்டால்தான் நமது தூலதேகம் பேரொளி வடிவான இறைவனை வணங்கும் தகுதியைப் பெறும். எனவே பாராயணம் செய்யத் தொடங்கும் முன் அவசியம் திருநீறு அணிந்து கொள்ள வேண்டும்.

2. பாடல்களை எழுத்துப் பிழையற ஓத வேண்டும். ஓதுதல் என்பது உரக்கச் சொல்லுதல் அன்று, மனத்திற்குள்ளாகச் சொல்லுதலே.

3. பாடல்களை விரைவாகவும் படிக்கக் கூடாது. அமைதியுடன் ஒவ்வொரு பாடலின் பொருளிலும் கருத்தூன்றிப் படிக்க வேண்டும். பாடலின் பொருளில் மனம் அழுந்தினால் சுவாமிகள் குறிப்பிடுகின்ற மனோலயம் தானே நிலைபெறும்.

4. பாராயணம் சிரத்தையுடனும், ஆழ்ந்த திடமான நம்பிக்கையுடனும் செய்யப்பட வேண்டும். நமது பிரார்த்தனை நிறைவேறுமோ நிறைவேறாதோ என்ற சந்தேகம் கூடாது. 'சுவாமிகளின் பாடல்களை ஓதி நாம் முருகப்பெருமானை வணங்குகின்றோம். நமது பிரார்த்தனை நிறைவேறுதல் உறுதி' என்ற நம்பிக்கையுடன் பாராயணம் செய்ய வேண்டும்.

5. காலை, நண்பகல், மாலை இம்மூன்று வேளைகளிலும் நியமத்துடன் பாராயணம் செய்க. நேரமும், வாய்ப்பும், சூழ்நிலையும் ஒத்துவரவில்லையெனில் காலையில் மட்டுமாவது அவசியம் பாராயணம் செய்க.

6.'ஓய்வு கிடைத்த போது பாராயணம் செய்யலாம்' என்ற எண்ணம் கூடாது. நாள் தோறும் தவறாமல் பாராயணம் செய்ய வேண்டும். இடைவெளி விட்டுப் பாராயணம் செய்யக்கூடாது.

7. நமது மரியாதைக்குரியவர் பேச விரும்பினால் கூடப் பாராயணத்தை இடையில் நிறுத்தி விட்டு உரையாடலில் ஈடுபட வேண்டாம். எந்த ஒரு தோத்திரத்தையும் அரைகுறையாகப் பாதியில் ஓதி நிறுத்திவிடக் கூடாது.

8. புலால் உணவு, கள்ம் சாராயம், பீடி, சிகரெட் இவை நீக்கிப் பாராயணம் செய்வோர் எல்லா நலன்களும் பெறுவர் என்பது உறுதி.

-----

குமாரஸ்தவம் (அதன் பொருளோடு)


ஓம் ஷண்முக பதயே நமோ நமஹ:
(ஆறு திருமுகங்களுடன் அடியார்களின் தேவைகளை உணர்ந்து வழங்கி அருள் செய்யும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் ஷண்மத பதயே நமோ நமஹ:
(ஆறு வகையான வழிபாட்டு நெறிமுறைகளுக்கும் முதன்மையாக உள்ள தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் ஷட்கிரீவ பதயே நமோ நமஹ:
(ஆறு தலைகளின் திருமேனிகளின் கழுத்துகளிலும் மணமிக்க வெற்றி மாலைகள் அணிந்துள்ள தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நமஹ:
(ஆறு சிரசுகளிலும் அழகிய திருமகுடங்கள் சூட்டியுள்ள அருள் தரும் கற்பகமாம் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் ஷட்கோண பதயே நமோ நமஹ:
(ஆறு கோணங்களின் அமைப்பாகவும் ஆறு எழுத்தான மறைச் சொல்லாகவும் உள்ள தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் ஷட்கோச பதயே நமோ நமஹ:
(ஆறு நெறிமுறைகளுக்கும் அருள் தரும் நூல்களுக்கும் ஆசான் ஆகிய தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் நவநிதி பதயே நமோ நமஹ:
(ஒன்பது செல்வங்களும் இகநலன்களும் மற்றும் நற்சுகமும் தந்தருளும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் சுபநிதி பதயே நமோ நமஹ:
(மங்களங்கள் யாவும் தந்து நலன்களும் நற்பேறுகளும் அருளும் சேவல் கொடியுடைய தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் நரபதி பதயே நமோ நமஹ:
(அடியார்களின் மெய் அறிவை வேலாயுதத்தால் உணர்த்தி அருளுடன் பொருளும் தரும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் சுரபதி பதயே நமோ நமஹ:
(சூரனையும் பதுமனையும் இரண்டாகப்பிளந்து திருச்செந்திலில் வானோரை சிறைமீட்ட சேனைத் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் நடச்சிவ பதயே நமோ நமஹ:
(தில்லை நடராசரின் திருமகளாக இருதய குகையில் இருந்து இயக்கி நடத்தும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் ஷடஷர பதயே நமோ நமஹ:
(ஓம் சரவணபவ நமஹ எனப் போற்றும் அடியார்களுக்கு அருளும் பொருளும் தரும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் கவிராஜ பதயே நமோ நமஹ:
(அகத்திய முனிவருக்கும் அருணகிரிநாதருக்கும் ஆசானாக உள்ள சுவாமிநாத குருவாகிய தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் தபராஜ பதயே நமோ நமஹ:
(தவமியற்றும் முனிவர்களுக்கும் அடியார்களுக்கும் வேண்டும் வரமருளும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் இஹபர பதயே நமோ நமஹ:
(வழிபடுவோரின் இகநலன்கள் மற்றும் ஆன்ம லாபமும் நல்வாழ்வும் தந்தருளும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் புகழ் முநி பதயே நமோ நமஹ:
(சந்த இசைப்பாடல்கள் பாடித்திருக்குமரனைப் போற்றும் அருணை அருணகிரிநாதரின் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் ஜய ஜய பதயே நமோ நமஹ:
(எங்கும் எதிலும் வெற்றி மேல் வெற்றியுடன் வாகையும் சூடும் வெற்றி வேலின் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் நய நய பதயே நமோ நமஹ:
(எண்ணி நல்லன எல்லாம் வழங்கும் காமதேனுவாக பொருள் பலவும் தந்து அருளும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் மஞ்சுள பதயே நமோ நமஹ:
(அழகின் திருஉரு உடைய செவ்வேள் எனும் சுவாமிநாத குருசுவாமியாகிய தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் குஞ்சரீ பதயே நமோ நமஹ:
(வள்ளிப் பிராட்டியாகிய செயல் ஆற்றலைத் தந்தருளும் வேடர்குல மன்னர் மகளின் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் மல்ல பதயே நமோ நமஹ:
(கைகலந்து போரிடும் முறையில் பகைவரை வென்று அடியார்தமைக் காத்தருளும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் அஸ்தர பதயே நமோ நமஹ:
(கையிலிருந்து வீசும் கூரிய வேலாயுதத்தால் போரிட்டு அசுரர்களை வெற்றி கொள்ளும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் சஸ்த்ர பதயே நமோ நமஹ:
(கைகளில் உள்ள ஆயுதங்களால் போரிட்டு பகைவர்களை வெல்லும் மறக்கருணையுடைய தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் சஷ்டீ பதயே நமோ நமஹ:
(ஆறாம் நாளாக உள்ள சஷ்டியன்று விரதம் இருப்போருக்கு அருளும் பொருளும் தரும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் இஷ்டி பதயே நமோ நமஹ:
(வேள்வி செய்வோர்க்கு வேண்டும் நன்மைதனைத் தந்து அருளும் தன்னிகரற்ற தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் அபேத பதயே நமோ நமஹ:
(குணமாகிய குன்றில் நின்று குறைகள் மற்றும் மாசுகள் ஏதுமின்றி அருளாட்சி செய்யும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் ஸுபோத பதயே நமோ நமஹ:
(அனுபூதி எனும் மெஞ்ஞானத்தை உணர்த்தியருளி அடியார்களை உய்வடையச் செய்யும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் வியூஹ பதயே நமோ நமஹ:
(எதிரியின் படைகளைச் சுற்றி வளைத்துப் போரிட்டு அழித்து வெற்றியடையும் தேவர்களின் சேனைத்தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் மயூர பதயே நமோ நமஹ:
(விரைந்து செல்லும் ஊர்தியும் ஓம் எனும் திரு உருவமும் உடைய மயில் வாகனத்தின் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் பூத பதயே நமோ நமஹ:
(உயிர் வாழ்வனவற்றின் இதயத்தில் வீற்றிருந்து ஆன்ம ஆற்றலாக இயங்கி வரும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் வேத பதயே நமோ நமஹ:
(மறை நூல்கள் அனைத்தையும் ஓதுவித்து எங்கும் இலங்கி விளங்கும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் புராண பதயே நமோ நமஹ:
(பூமியின் தோற்றத்திற்கு முக்கியமானதும் எப்போதும் எங்கும் நிறைந்துள்ள அருளே உருவான தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் பிராண பதயே நமோ நமஹ:
(உயிரோட்டமாக எல்லாவற்றிலும் இருந்து அவற்றை ஏற்றருளும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் பக்த பதயே நமோ நமஹ:
(இறையன்பு உடையோர் வழிபடும் இடத்திற்கு உவந்து வந்து அருள் மழைபொழியும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் முக்த பதயே நமோ நமஹ:
(அகப்பற்றும் புறப்பற்றும் இல்லாத மோன நிலையடைந்த அனுபூதியாளர்களின் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் அகார பதயே நமோ நமஹ:
(எழுத்துக்களுக்கு அ முதலில் உள்ளது போல் ஆக்கல் தொழிலையும் செய்யும் இறைவனாகிய தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் உகார பதயே நமோ நமஹ:
(ஊகாரமாகிய காக்கும் சக்தியாகிய திருச்செந்தூரில் சூரனிடமிருந்து சுரர்களைக் காத்து மீட்டு அருளிய தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் மகார பதயே நமோ நமஹ:
(மகாரமாகி ஏற்றருளும் பாங்குடன் வாழ் நாளிலேயெ அவரவர் நல்வினை வழி மெய்யறிவினை வழங்கும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் விகாச பதயே நமோ நமஹ:
(சிவசுப்பிரமணியமாக எங்கும் எதிலும் முழுவதுமாக நிறைந்துள்ள தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் ஆதி பதயே நமோ நமஹ:
(மூலமுதலுக்கும் முந்தியதும் யாவரும் எப்போதும் விரும்பிப் போற்றி வணங்கும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் பூதி பதயே நமோ நமஹ:
(பூதி எனப்படும் பொருள் வளம் அனைத்தையும் நல்கியருளும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் அமார பதயே நமோ நமஹ:
(வேட்கையை வென்ற சிவனுக்கு ஒரு சொல்மறை ஓதிய சுவாமிநாதர் குமரகுருவாகிய தலைவனுக்குப் போற்றி போற்றி)

ஓம் குமார பதயே நமோ நமஹ:
(எப்போதும் இளம் குமராக உள்ளவனும் கருவேள் தரும் மாயைதனை நீக்கும் தலைவனுக்குப் போற்றி போற்றி)

குமாரஸ்தவம் நிறைவுற்றது.


search tags : sree kumarasthavam, pamban swami, ஸ்ரீ குமாரஸ்தவம், பாம்பன் சுவாமிகள், கந்தன், முருகன், Lord Muruga, Lord Kanthan

No comments:

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin