ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Friday, April 24, 2009

பூஜை செய்யும் வழிமுறைகள்

* நெற்றியில் திருநீறோ குங்குமமோ அல்லது திருமண்ணோ இல்லாமல் பூஜை செய்யக்கூடாது. காரணம் இவை இறை சின்னங்கள். இவை நம் மனதை ஒருமுகப்படுத்தி பூஜையில் ஈடுபட உதவும்.

* பூஜைப் பொருட்களில் பூக்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் தண்ணீரில் அலம்பவேண்டும்.

* பூஜைக்குப் பயன்படும் மலர்கள் புழு அல்லது பூச்சியின் தாக்கத்திற்கு ஆளாகாததாக இருக்கவேண்டும். ஒரு வேளை அவை புழு,பூச்சி அரித்துக் காணப்படுமாயின் அவற்றை பூஜைக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அத்தோடு நல்ல மலர்களின் காம்புகளை ஆய்ந்து அவற்றில் தலைமுடியோ அல்லது வேறு பொருட்களோ இல்லாதவாறு சுத்தப்படுத்த வேண்டும்.

* பூஜைக்கு தேவையான பொருட்களை நினைவில் வைத்து முன்கூட்டியே சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். பூஜையின் போது பொருட்களை சேகரிப்பதைத் தவிருங்கள்.

* தீபம், மணி, வெற்றிலை, தேங்காய், சங்கு, பழம். பூக்கள் இவற்றை வெறுந்தரையில் வைக்கக்கூடாது.

* பூஜைப் பொருட்களில் பூக்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் தண்ணீரில் அலம்பவேண்டும்.

* பூஜை நடுவில் எழுந்தி போகக்கூடாது.

* மந்திரம் தவிர்ந்த வேறு பயனற்ற பேச்சுக்கள் எதையும் பூஜையின் போது பேசலாகாது. மனம், வாக்கு, காயம் இம்மூன்றாலும் இறைவனை இறைஞ்சி வணங்குங்கள்.


search tags : payanulla thakaval, good, poojai, பயனுள்ள தகவல், நல்ல தகவல்கள், தகவல்கள்.

No comments:

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin