ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Wednesday, May 20, 2009

திருக்குறள் 21-30 (பொருளோடு)



திருக்குறள் 21-30


அறத்துப்பால்

நீத்தார் பெருமை



ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு -21

தாம் சார்ந்த ஒழுக்க நெறியில் தவறாது நின்று பிறவற்றைத் துறந்தவர்களின் பெருமைகளை விரும்பிப் போற்றிப் புகழ்வதே நூல்களின் துணிவாகும்.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று -22

இது வரையான காலத்தில் இவ்வுலகில் பிறந்து இறந்தோரைக் கணக்கிட்டுக் கூறமுடியாது. அதே போல் பற்றற்ற ஞானிகளின் பெருமைகளையும் அளவிட்டுக் கூறமுடியாது.

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறிங்கிற்று உலகு -23

பிறப்பு, வீடு எனும் இருவகைக் கூறுகளைத் தெரிந்து தெளிந்து அதற்கு ஏற்றால் போல் இங்கு அறவாழ்க்கை மேற்கொண்டோரின் பெருமைகளே உலகில் சிறந்தது.

உரெனென்னும் தோட்டியான் ஒரைந்தும் காப்பான்
வரெனென்னும் வைப்பிற்கோர் வித்து. -24

மனவலிமை எனும் அங்குசத்தால் ஐம்பொறிகள் என்னும் யானையின் வேட்கையை அடக்கியவன் வீடு என்னும் உயர்ந்த நிலத்திற்கு விதை போன்றவன் ஆவான்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி. -25

ஐம்புலன்களின் இன்ப ஆசைகளை அவித்து ஒழித்த வலிமைக்கு வானத்து தேவர்களின் அரசன் இந்திரனே சரியான சான்றாக அமைவான்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். -26

எவராலும் செய்ய இயலாத அருமையான செயல்களைச் செய்து காட்டுகின்றவர்களே பெரியவர் ஆவர். அத்தகு செயல்களைச் செய்யும் ஆற்றல் இல்லாதவர் சிறியவராவர்.

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. -27

சுவைத்தல், பார்த்தல், உணர்தல், கேட்டல், முகர்தல் எனும் ஐந்து வகைக் கூறுகளையும் அறிந்து தெளிந்த அறிஞனுடைய அறிவில் உலகம் உள்ளது.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். -28

நிறைவு மிக்க பயன்மிகுந்த சொற்களைப் பேசிச் சிறந்த சான்றோரின் பெருமைகளை உலகத்துள் அவர்கள் அருளிச் சென்ற மறைமொழிகளே காட்டி நிற்கும்.

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது. -29

நற்பண்புகள் என்னும் குணங்களுடைய குன்றின் உச்சியில் நிற்கும் தவசீலர்கள் சினம் என்னும் கோபத்தை ஒரு கணப்பொழுதேனும் வைத்துக் காத்தல் அரிதாகும்.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். -30

அனைத்து உயிர்களிடமும் செம்மையான கருணையை மேற்கொண்டு ஒழுகும் அறம் கொண்டோரே அந்தணர் எனப்படுவர்.


இப் பதிவோடு தொடர்பான பதிவுகள் : திருக்குறள் 11-20


search tags : Thirukural, Thiruvalluvar, Arathu Paal, திருவள்ளுவர், திருக்குறள், அறத்துப்பால்

No comments:

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin