ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Sunday, May 31, 2009

உண்மை



உண்மை

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பொன்மொழிகள் மிகுந்த அர்த்தம் பொதிந்தவை. அனைவருக்கும் புரியும்படி மிக எளிமையாகச் சொல்லப்பட்டவை. அவற்றில் 'உண்மை' பற்றிய அவரின் பொன்மொழிகளை இப்போது பார்ப்போம்.


* பகவானிடம் ஹிருதய பூர்வமான பக்தி கொள்வாய். கபடவேஷத்தையும் ஏமாற்றுதலையும் விட்டுவிடு. குமாஸ்தா வேலை செய்பவராயிருந்தாலும், வியாபாரிகளாக இருந்தாலும் அவர்களும் கூட உண்மை பேசுவதிலிருந்து தவறுதலாகாது. உண்மையையே பேசுவதே கலியுகத்துக்கான தவமாகும்.

* ஒருவன் எப்போதும் சத்தியத்தையே பேசுகிறவனாக இருந்தாலல்லாமல் சத்திய ஸ்வரூபியாகிய ஈசுவரனைக் காணமுடியாது.

* மனிதன் ஸத்தியம் பேசுதலில் தவறக்கூடாது. அவ்விஷயத்தில் வெகு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எப்போதும் உண்மையே பேசிவந்தால் கடவுள் சாஷாத்காரத்தை அடையப்பெறலாம்.

* பொய் அனைத்தும் கெட்டவை. பொய் வேஷமும் கெட்டதே. உன் வேஷத்துக்குத் தகுந்தபடி மனம் இராமற்போனால், நீ பெரும் நாசமடைவாய். இப்படித்தான் ஒருவன் வஞ்சகனாகிறான்; பொய் பேசுவதிலும் பொய்க் காரியங்களைச் செய்வதிலும் உள்ள பயம் அவனுக்குப் போய்விடுகிறது.

* ஒரு மனிதனுக்குக் கடன் வெகு ஜாஸ்தியாகி விட்டது. அதனில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக அவன் பைத்தியம் பிடித்தவன் போலப் பாசாங்கு செய்து கொண்டிருந்தான். வைத்தியர்களால் யாதொரு குணமும் உண்டாகவில்லை. மருந்து அதிகமாக உள்ளே செல்லச்செல்ல பாசாங்குப் பைத்தியமும் அதிகரித்தது. கடைசியாக, புத்திசாலியான வைத்தியன் ஒருவன் உண்மையைத் தெரிந்து கொண்டு போலிப் பைத்தியனைத் தனியாக அழைத்துப்போய், "அடே! நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்! ஜாக்கிரதை! பைத்தியம் என்று பாசாங்கு பண்ணிக்கொண்டிருந்தால், வாஸ்தவமாகவே உனக்குப் பைத்தியம் பிடித்துவிடும். இப்போதே உன்னிடம் சில பைத்தியக் குறிகள் தென்படுகின்றன" என்றான். இதைக்கேட்ட அம்மனிதன் பயந்து போய் பைத்தியமெனப் பாசாங்கு செய்வதை விட்டான். இடைவிடாது நீ எவ்விதம் இருப்பதாகக் காட்டிக்கொள்கிறாயோ, அவ்விதமாகவே ஆகிவிடுவாய்.


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : சத்தியம்


search tags : sree ramakrishna paramahamsar, ramakrishna paramahamsar, Unmai, உண்மை, ராமகிருஷ்ணர், ராம கிருஷ்ண பரமஹம்சர்.

---

2 comments:

தேவன் said...

உங்களுடைய நண்பணாக இருக்க ஆசைப் படுகிறேன்.

அடியார் said...

வருகைக்கு நன்றி அன்பரே....

நான் அனைவருக்கும் நண்பனே...

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin