ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Tuesday, June 16, 2009

பஜனையும் பக்தியும்



பஜனையும் பக்தியும்

ராமகிருஷ்ணரின் பொன்மொழிகள் மிகுந்த அர்த்தம் பொதிந்தவை. படிப்போருக்கு எளிதில் புரியும்வண்ணம் கூறினார். அவர் கூறியவற்றில், பஜனையும் பக்தியும் பற்றிப் பார்க்கலாம் வாருங்கள்...


* வாய்விட்டு உரக்கத்தான் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டுமா?. உனக்கு எப்படி இஷ்டமோ அப்படிப் பிரார்த்தனை செய்யலாம். அவன் எப்போதும் உன் பிரார்த்தனையை நிச்சயமாகக் கேட்பான். எறும்பின் காலடி சப்தம் கூட அவனுடைய காதுகளில் கேட்கும்.

* பிரார்த்தனையால் வாஸ்தவமான பலன் உண்டா? உண்டு. மனமும் வாக்கும் ஒன்று சேர்ந்து ஊக்கத்தோடு ஏதேனும் ஒரு பொருளைப் பிரார்த்தித்துக் கேட்குமானால் அந்தப் பிரார்த்தனைகுப் பலன் கிடைக்கும். " ஈசுவரா! இவையெல்லாம் உன்னுடையவை " என்று வாயால் மட்டும் சொல்லி, அவையெல்லாம் தன்னுடையவை என்று மனதில் நினைக்கிறவனுடைய பிரார்த்தனைக்குப் பலன் உண்டாகாது.

* உனது நெஞ்சுக்குத் துரோகம் செய்யாதே, மனச்சாட்சியின்படி நட. நிச்சயமாக உனக்கு ஜயம் உண்டாகும். கள்ளம் கபடம் அற்ற உள்ளத்தோடு பிரார்த்தனை செய். ஈசுவரன் கேட்பான்.

* நெஞ்சில் உள்ளதையே வாயால் சொல்லு. உனது சொல்லுக்கும் நினைவுக்கும் அத்தியந்த ஒற்றுமை இருக்கட்டும். உன் மனம் உல்கத்திலேயே உழன்று கொண்டிருக்கும்போது, எல்லாம் ஈசுவரனே என்று வாயால் மாத்திரம் சொல்லிக்கொண்டிருந்தால் உனக்கு யாதொரு நன்மையும் உண்டாகாது.

* ஒரு பெரிய சக்ரவர்த்தியிடம் போகவேண்டுமானால் வாசல் காப்போனையும், ஏஎனைய அதிகாரிகளையும் நயந்து கொள்ள வேண்டும். சர்வேசுவரனுடைய சந்நிதானத்தை அடைய வேண்டுமானால் வெகுவாகப் பக்தி செய்து, அநேக பக்தர்களுக்குத் தொண்டு செய்து, நெடுநாள் ஸாது ஸ்ஹவாஸம் செய்யவேண்டும்.

* உலகத்தைப் பற்றிய எண்ணங்களும் கவலைகளும் உன் மனதைச் சஞ்சலப்படுத்தும்படி செய்து கொள்ளாதே. செய்ய வேண்டிய காரியங்கள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செய். ஆயினும் உன் மனம் எப்போதும் இறைவனிடம் நிலைத்திருக்கட்டும்.

* திசையறி கருவியின் நுனி எப்போதும் வட திசையையே காட்டும் வரையில் கப்பலானது தனது மார்க்கத்தைவிட்டு விலகிப்போய் ஆபத்துக்குள்ளாவதில்லை. வாழ்க்கையாகிய கப்பலின் திசையறி கருவியாகிய மனிதனுடைய மனமானது பரப்பிரம்மத்தையே எப்போதும் நோக்கி அசைவற்றிருக்குமாகில் அது ஒவ்வோர் ஆபத்தையும் தாண்டிப் போகும்.

* எவ்விதம் பகவத் பிரார்த்தனை செய்ய வேண்டும்?. நாரத மகரிஷியைப் போல் பிரார்த்திக்க வேண்டும். உலகப் பொருள்களை நாம் பகவானிடம் யாசிக்கலாகாது. " ஓ ராமா, எனக்கு பக்தியும் உன் பாதக்கமலங்களில் சரணடையும் மனப்பான்மையும் தந்தருள்வாய் " என்று வேண்டிக் கொண்டார் அம்முனிவர், " நாரத ரிஷி, அவ்விதமே அளித்தேன். நாரதரே வேறு ஒன்றும் உமக்கு வேண்டாமோ ?" என்றார் ஸ்ரீராமச்சந்திர பிரபு.

" ஜகத்தையெல்லாம் மயக்கிவரும் மாயையின் வலையில் நான் சிக்குண்டு உழலாது காப்பாற்றப்பட வேண்டும் " என்று மறுவரம் வேண்டினார் நாரதர். " அங்கனமே ஆகுக; வேறு ஏதேனும் கேட்க மாட்டீரா? " என்றார் ஸ்ரீராமபிரான். அதற்கு நாரத மகரிஷி : அதுவே போதும், வேறொன்றும் நான் வேண்டேன் " என்று கூறிவிட்டார்.

* " ஏ பகவான்! நீ ரூபத்தோடு இருக்கிறாயா, அல்லது நீ ரூபமற்றவனா என்பது எனக்குத் தெரியாது. நீ எப்படி இருந்தபோதிலும் என்மீதுள்ள உன் கருணையால் என்னைக் கடாட்சித்து அருள்வாய். எனக்கு உன் தரிசனம் கிடைக்கும்படி அனுக்ரகம் செய்வாய் " என்று பிரார்த்திப்பாயாக.

* பகவானைப்பற்றி மனதில் சிந்தனை செய்வதற்கு ஏதுவாகயிருக்கும்படி பல ரூபங்களும் குணங்களும் அவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கலாம். அவைகள் ஒவ்வொன்றின் மீதும் நம்பிக்கை கொள்ளவேண்டுமென்பது அவசியம் இல்லாமல் போனாலும், உலகத்தைப்படைத்து நடத்துகிற ஒரு தெய்விக சக்தியிருப்பதாக நம்பி, கசிந்துருகிய மனதுடன் ஒருவன், "பகவானே, நான் உமது உண்மை ஸ்வரூபத்தை உணர்ந்தவனல்லேன். உமது உண்மை ஸ்வரூபத்தை நீரே எனக்குக் காட்டியருள வேண்டும் " என்று அவரைப் பிரார்த்தித்தால் பகவான் தம் கருணைப் பிரவாகத்தை அவன் மீது செலுத்துவார்.

* கடவுள் எல்லாவற்றையும் அறியவல்லவர். சிறு துரும்பு விழும் சத்தத்தையும் அவர் அறிவார். ஆகையால் என் குழந்தைகளே, உங்கள் பிரார்த்தனை ஒவ்வொன்றும் அவர் செவியிற்படும். என்றைக்காவது ஒரு நாள், சாகுந்தருவாயிலேனும் உங்களுக்குத் தம் வடிவைக் காட்டியருளுவார்.


இப்பதிவோடு தொடர்புடைய பதிவு : உண்மை


search tags : sree ramakirishna paramahamsar, pon moligal, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், பொன்மொழிகள்.

_*_*_*_

No comments:

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin